சமையலுக்கு மட்டும்தான் உளுந்து பயன்படும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், சருமப் பொலிவிற்கும் உளுந்து உதவுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
Advertisment
தேவையான பொருட்கள்:
வெள்ளை உளுந்து - 4 டேபிள் ஸ்பூன்
Advertisment
Advertisements
காய்ச்சாத பசும்பால் - தேவையான அளவு
பழுத்த தக்காளி - 1
இயற்கைத் தேன் - தேவையான அளவு
ஃபேஸ் பேக் தயாரிக்கும் முறை:
ஒரு பவுலில் 4 டேபிள் ஸ்பூன் வெள்ளை உளுந்து எடுத்துக்கொள்ளுங்கள்.
அதில் ஒரு டம்ளர் காய்ச்சாத பசும்பால் சேர்த்து, இரண்டு மணி நேரம் ஊற விடுங்கள்.
ஊறிய உளுந்து மற்றும் பாலை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைக்கவும். தேவைப்பட்டால், மேலும் பால் சேர்த்துக்கொள்ளலாம்.
ஒரு பழுத்த தக்காளியைக் கழுவி, அதன் மேல் பகுதியை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, அரைத்து வைத்திருக்கும் கலவையுடன் சேர்த்து மீண்டும் அரைக்கவும்.
அரைத்த விழுதை ஒரு பவுலுக்கு மாற்றவும்.
அதில் தேவையான அளவு ஃப்ரெஷ்ஷான, இயற்கைத் தேன் சேர்த்து, நன்றாக கலக்கவும்.
இந்த ஃபேஸ் பேக்கை ஒரு வாரம் வரை ஃபிரிட்ஜில் சேமித்து பயன்படுத்தலாம்.
ஃபேஸ் பேக் பயன்படுத்தும் முறை:
முதலில் உங்கள் முகத்தை நன்றாகக் கழுவிக்கொள்ளுங்கள்.
தயாரித்த ஃபேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவவும்.
20 நிமிடம் காய விடவும்.
பிறகு, சிறிது தண்ணீர் சேர்த்து, முகத்தில் மெதுவாக மசாஜ் செய்து கழுவவும்.
இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.
இந்த ஃபேஸ் பேக் போட்ட முதல் நாளிலேயே நல்ல பலன் கிடைக்கும். இரண்டாவது முறை பயன்படுத்தும்போது, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் கருமை நீங்கி, உங்கள் சருமம் தெளிவடைந்து பொலிவுடன் மின்னுவதைக் காணலாம்.
இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தி உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்துக்கொள்ளுங்கள்!