நெய் தடவி மசாஜ் செய்த பின் இதை செய்யுங்க… முகம் பளிச்சென மாறும்; டாக்டர் ஷர்மிகா

நெய்யை எப்படிப் பயன்படுத்துவதன் மூலம் பளபளப்பான சருமத்தைப் பெறலாம் என்பது குறித்து மருத்துவர் ஷர்மிகா கூறிய டிப்ஸ் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

நெய்யை எப்படிப் பயன்படுத்துவதன் மூலம் பளபளப்பான சருமத்தைப் பெறலாம் என்பது குறித்து மருத்துவர் ஷர்மிகா கூறிய டிப்ஸ் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
 your face will become

நெய் தடவி மசாஜ் செய்த பின் இதை செய்யுங்க… முகம் பளிச்சென மாறும்; டாக்டர் ஷர்மிகா

சினிமா நட்சத்திரங்களின் மின்னும் சருமத்தின் ரகசியம் என்ன தெரியுமா? அது வேறொன்றுமில்லை, நம்முடைய வீட்டிலுள்ள நெய் தான்! ஆம், நெய் வெறும் சுவையான உணவுப் பொருள் மட்டுமல்ல, உங்கள் சருமத்திற்கு அற்புதமான மருந்தாகவும் செயல்படுகிறது. இந்தப் பதிவில் நெய் எப்படிப் பயன்படுத்துவதன் மூலம் பளபளப்பான சருமத்தைப் பெறலாம் என்பது குறித்து மருத்துவர் ஷர்மிகா கூறிய டிப்ஸ் பற்றி பார்க்கலாம்.

Advertisment

இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், நெய் பாரம்பரியமாக உணவு மற்றும் அழகுப் பராமரிப்பு இரண்டிற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் மருத்துவ குணங்கள் ஏராளம். நெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்கள் சருமத்தை ஈரப்பதமாக்கி, வறட்சி நீங்க உதவுகின்றன. மேலும், இது சருமத்திற்கு மென்மையான பளபளப்பைக் கொடுக்கும் இயற்கையான மாய்ஸ்சரைசராகவும் செயல்படுகிறது.

யார் இந்த முறையைத் தவிர்க்க வேண்டும்?

உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் இந்த நெய் முறையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். நெய் உடலுக்கு வெப்பத்தை அளிக்கக் கூடியது என்பதால், உடல் சூடு அதிகமாக இருக்கும்போது பயன்படுத்துவது மேலும் அசௌகர்யத்தை ஏற்படுத்தலாம்.

Advertisment
Advertisements

நெய்யை எப்படி பயன்படுத்துவது?

நெய்யை உருக்கியோ அல்லது அப்படியேவோ பயன்படுத்தலாம். உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு எடுத்துக்கொள்ளுங்கள். முக்கியமான விஷயம் என்னவென்றால், நெய் சுத்தமானதாக இருக்க வேண்டும். சிறிதளவு நெய்யை எடுத்து உங்கள் முகம், கழுத்து மற்றும் காதுகளில் மெதுவாக தடவவும். 2 நிமிடங்களுக்கு மேல் நோக்கி மென்மையாக மசாஜ் செய்யவும். இந்த மசாஜ் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, நெய் சருமத்தில் ஆழமாக ஊடுருவ உதவும்.

மசாஜ் செய்த பிறகு, குளிப்பதற்கு வெதுவெதுப்பான சுடுதண்ணீரை லேசாக உங்கள் சருமத்தின் மீது ஊற்றி மெதுவாகத் தேய்க்கவும். அதிக சூடான நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் அது சருமத்தை வறண்டு போகச் செய்யலாம். அரை மணி நேரம் கழித்த பிறகு, பாசிப்பயிறு மாவு அல்லது நலங்கு மாவு போன்ற இயற்கையான ஸ்க்ரப் பவுடரைப் பயன்படுத்தவும். பீர்க்கங்காய் நார் போன்ற மென்மையான ஸ்க்ரப்பரால் தேய்த்து ஸ்கிரப் செய்யவும். பிளாஸ்டிக் நார் போன்ற கடினமான ஸ்க்ரப்பர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை சருமத்திற்கு எரிச்சலை உண்டாக்கலாம்.

நெய் போடுவதற்கு முன்னதாக, தண்ணீர், வெள்ளை பூசணி ஜூஸ் அல்லது மோர் போன்ற ஏதேனும் நீர்ச்சத்து நிறைந்த பானத்தைக் குடிப்பது அவசியம். இல்லையெனில், சருமம் வறண்டு போக வாய்ப்புள்ளது. உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருப்பது சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும் என்கிறார் மருத்துவர் ஷர்மிகா.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: