/indian-express-tamil/media/media_files/rc8vz7RRKBfZBwgfg0Y9.jpg)
மாதுளை பழச்சாறில் பல நன்மைகள் இருக்கிறது. அதில் வயிற்றை குளுமைப்படுத்தும், வாயுத் தொல்லையை நீக்கும். வயிற்று அல்சர், வயிற்றுப்போக்கு ஆகியவற்றை போக்குகிறது. ஆனால் இதை அதிகமாக குடித்தால் வயிற்று உப்புதல் ஏற்படலாம்.
குறிப்பாக மலச்சிக்கல், மலத்தை வெளியேற்றுவதில் சிரமம் கொண்டவர்கள் இதை எடுத்துகொண்டால் வயிற்று உப்புதல் ஏற்படலாம். நமது ஜீரண மண்டலத்தில் வாயு சேகரிக்கப்பட்டால், அது வயிற்று உப்புதலை ஏற்படுத்தலாம்.
இந்தியாவில் அதிகபடியான வயிறு உப்புதல், அஜீரணம் ஏற்படக் காரணம், நாம் எடுத்துகொள்ளும் அதிக காரம், எண்ணெய் சேர்த்த உணவுகள்தான். இதனால் நாம் உணவை தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.
இந்நிலையில் ஒரு கைபிடி கருப்பு திராட்சையை மாதுளைப் பழச்சாறில் சேர்த்து, ஒரு சிட்டிகை பிளாக் சால்ட்டை சேர்க்கவும். இவை வயிற்று உப்புதலை தடுக்கும்.
இதுபோல மாதுளை பழச்சாறில் சில துளிகள் நெய் சேர்த்து குடிக்கலாம். இதுவும் நல்ல தீர்வாக அமையும். பிளாக் சால்டில் மெக்னிஷியம், கால்சியம், இரும்பு சத்து ஆகியவை உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.