கனமான போர்வை இருக்கா? ஏ.சி இல்லாமல் வீடு கூலாக இருக்க இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க!
சுட்டெரிக்கும் வெயிலில் வீட்டை ஏசி பொருத்தாமலே, குளுமையாக வைத்துக் கொள்ள பல வழிகள் உள்ளது. அவற்றில் சிலவற்றைப் பார்போம். இதில் அதிக சிரமமும் இல்லை, செலவினமும் இல்லை.
சுட்டெரிக்கும் வெயிலில் வீட்டை ஏசி பொருத்தாமலே, குளுமையாக வைத்துக் கொள்ள பல வழிகள் உள்ளது. அவற்றில் சிலவற்றைப் பார்போம். இதில் அதிக சிரமமும் இல்லை, செலவினமும் இல்லை.
கனமான போர்வை இருக்கா? ஏ.சி இல்லாமல் வீடு கூலாக இருக்க இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க!
வெயில் காலம் துடங்கிவிட்டாலே ஏ.சியின் வியாபாரம் களை கட்டத் தொடங்கிவிடும். என்னதான் ஏசி இருந்தாலும் நாள் முழுவதும் வீட்டில் ஏசி போட்டு வைக்க முடியாது. அதுவும் மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு சாத்தியமே இல்லை. அந்த வகையில், வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே ஏசி போன்ற குளிர்ச்சியான காற்றை வர வைக்கலாம். எப்படி என்று பார்ப்போம்..
Advertisment
முடிந்த அளவு சீலிங் மின்விசிறிக்குப் பதிலாக, மேசை மின்விசிறியைப் பயன்படுத்தலாம். இதனால், ஜன்னலில் இருந்து வரும் இயற்கையான காற்றை நமது பக்கம் திருப்ப முடியும். டேபிள் பேன் பின்புறத்தில், சற்று தொலைவில் வாளி நீரை வைத்தால், இன்னும் குளிர் காற்று கிடைக்கும். சீலிங் மின்விசிறியைப் பயன்படுத்தும் போது, அதன் கீழே சிறிய சிறிய அளவில் ஐஸ் கட்டிகள் வைக்கும்போது அதன் மேல் காற்று பட்டு குளிர் காற்று கிடைக்கும். இதே போல் இரவில் உறங்குவதற்கு முன்பு, படுக்கும் தரையில் சிறது நீர் தெளிக்கலாம். கனமான போர்வையை வாளியில் நீர் நிரப்பி அதில் முழுவதுமாக நனைத்து பேன் காற்று வரும் இடத்தில் வைக்கலாம். இதனால், அறை முழுவதும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும்.
கடுமையான வெயில் தாக்கம் இருந்தால் ஒரு பவுள் நிறைய ஐஸ் கட்டிகளை நிரப்பி அதை டேபிள் ஃபேன் முன் வைத்தால் ஏசி போல் சில்லென காற்று வீசும். வெளிக்காற்று உள்ளே வருமாறு கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் திறந்த வையுங்கள். அதேசமயம் வீட்டில் இருக்கும் வெப்பமும் வெளியேறும். மாலை நேரத்திலும் கதவைத் திறந்து வைத்தால் குளிர்சியான காற்று வீட்டை கூலாக்கும்.
மொட்டை மாடியில் நீர் தெளியுங்கள் அல்லது தென்னை ஓலை பரப்புங்கள் : உங்கள் சீலிங் குளிர்ச்சியாக இருந்தால்தான் வீட்டின் வெப்பம் இறங்காது. அதற்கு அவ்வபோது மொட்டைமாடியில் தண்ணீர் தெளித்தால் சீலிங் குளிர்ச்சியாக இருக்கும். பச்சையான தென்னை ஓலைகளை மாடியில் பரப்புவதன் மூலம் நேரடியாக வெயில் வெப்பம் தாக்குவதைத் தவிர்க்கலாம். சீலிங் குளிர்ச்சியாக இருக்கும்.