/indian-express-tamil/media/media_files/2025/04/15/mHPUvbqitVteBgl9pYbh.jpg)
தற்போது நிறைய பேர் குதிகால் வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். உடல் எடை அதிகமானவர்கள், நீண்ட நேரம் வேலை செய்பவர்கள், அதிக நேரம் நின்று கொண்டு பணியாற்றுபவர்கள், புதிதாக உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் போன்றோருக்கு குதிகால் வலி ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.
இது தவிர யூரிக் ஆசிட் அதிகமான அளவில் இருப்பவர்களுக்கு குதிகால் வலி இருக்கும் என்று மருத்துவர் ராஜகோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சில சமயங்களில் காலை நேரத்தில் எழுந்ததும் இதன் வலி அதிகமாக இருக்கும். இவ்வாறு குதிகால் வலியால் பாதிக்கப்படுபவர்கள் சில வழிமுறைகளை பின்பற்றினால், வலியை குறைக்க்லாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்தலாம். அதன்படி, இந்த தண்ணீரை ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்திருந்தால் புளித்து விடும். மறுநாள் புளித்து போன அரிசி கழுவிய தண்ணீரில் ஒரு ஸ்பூன் சுக்குப் பொடி, ஓமம், எலுமிச்சை சாறு மற்றும் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு சேர்த்து கலக்கி லேசாக சூடுபடுத்த வேண்டும்.
பின்னர், இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாக இந்த தண்ணீரில் குதிகாலை சுமார் 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அடுத்த நாளில் இருந்து குதிகால் வலி குறைவது தெரியும். மேலும், இதனை தொடர்ச்சியாக செய்யும் போது அப்பகுதியைச் சுற்றி படிந்து இருக்கும் யூரிக் ஆசிட் குறையும் என்று மருத்துவர் ராஜகோபால கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - Nalam Virumbi Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.