தர்பூசணி பழத்தில் கெமிக்கல் சேர்ப்பது உண்மையா? விளக்கம் தரும் டாக்டர் அருண் குமார்

தர்பூசணி பழத்தில் இரசாயனங்கள் சேர்க்கப்படுவதாக கூறப்படும் நிலையில், அதில் இருக்கும் உண்மைத் தன்மை குறித்து மருத்துவர் அருண் குமார் விளக்கம் அளித்துள்ளார். அதனை இப்பதிவில் காணலாம்.

தர்பூசணி பழத்தில் இரசாயனங்கள் சேர்க்கப்படுவதாக கூறப்படும் நிலையில், அதில் இருக்கும் உண்மைத் தன்மை குறித்து மருத்துவர் அருண் குமார் விளக்கம் அளித்துள்ளார். அதனை இப்பதிவில் காணலாம்.

author-image
WebDesk
New Update
Watermelon myth

கோடை காலம் வந்தாலே தர்பூசணி பழத்தின் நினைவு தான் பலருக்கும் வரும். அதன் சுவை மற்றும் நீர்ச்சத்திற்காக பெரும்பாலான மக்கள் அதனை விரும்புகின்றனர். ஆனால், சமீப நாட்களில் தர்பூசணி பழம் குறித்த ஒரு அச்சம் மக்களிடையே நிலவுகிறது.

Advertisment

ஏனெனில், தர்பூசணி பழத்தில் செயற்கையான சாயம் சேர்க்கப்படுவதாகவும், இதனால் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் உலா வருகின்றன. குறிப்பாக, துணி அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு தர்பூசணி பழத்தில் தேய்க்கும் போது அவை சிவப்பு நிறமாக மாறினால் அதில் இரசாயனம் கலந்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

அதன்படி, இவ்வாறு பரப்பப்படும் விஷயத்தில் இருக்கும் உண்மைத் தன்மை குறித்து மருத்துவர் அருண் குமார் விளக்கம் அளித்துள்ளார். செயற்கையான சாயங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பாக, பூக்கள் மற்றும் இலைகளில் இருந்து தான் சாயம் எடுக்கப்பட்டதாக மருத்துவர் அருண் குமார் கூறுகிறார்.

அதேபோல், தர்பூசணி பழத்திலும் லைகோபின் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. தர்பூசணி பழங்கள் சிவப்பாக இருப்பதற்கு இந்த லைகோபின் தான் காரணம் என்று மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார். இது மட்டுமின்றி தக்காளி, சிவப்பு குடைமிளகாய் போன்றவற்றிலும் இந்த லைகோபின் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

எனவே, இயற்கையான தர்பூசணி பழங்களில் துணி அல்லது டிஷ்யூ பேப்பர் படும் போது அவை சிவப்பு நிறமாக மாறும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், எரித்ரோசின் என்ற சாயத்தை தர்பூசணி பழங்களில் கலப்பதாக கூறப்படுவது வெறும் வதந்தி என்று அவர் திட்டவட்டமாக கூறுகிறார். 

மேலும், ஒரே பழத்தில் 10 இடங்களில் ஊசியால் குத்தி இந்த சாயத்தை செலுத்தினாலும் அவை பழம் முழுவதும் பரவாமல், பார்ப்பதற்கு அப்படியே தெரியும் என்று மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார். எனவே, சர்க்கரை நோயாளிகளை தவிர மற்றவர்கள் தர்பூசணி பழங்களை சாப்பிடலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.

நன்றி - Doctor Arunkumar Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

watermelon

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: