நம் முகம் பொலிவுடனும், ஈரப்பதத்துடனும் இருக்கவும், சுருக்கங்கள் இல்லாமல் இளமையாகத் தோன்றவும், தினமும் காலையில் வெறும் வயிற்றில் என்ன செய்யலாம் என டாக்டர் ஜெயரூபா ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
செய்முறை: ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதைகள், ஒரு டீஸ்பூன் வெந்தயம் இந்த மூன்று பொருட்களையும் 500 மில்லி தண்ணீர் சேர்த்து இரவில் ஊறவைக்க வேண்டும். காலையில், சீரகம், வெந்தயம், கொத்தமல்லி விதைகள் ஊறிய தண்ணீரை லேசாக சூடுபடுத்தி, வெதுவெதுப்பான நிலையில் அருந்தலாம்.
இந்தத் தண்ணீரைத் தினமும் அருந்துவதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெறலாம்.
சருமப் பொலிவு: நம்முடைய குடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே முகம் பளபளப்பாக இருக்கும். இந்தத் தண்ணீர் குடலைச் சுத்தம் செய்து, செரிமான மண்டலத்தை மேம்படுத்துவதால், முகம் பொலிவு பெறும்.
Advertisment
Advertisements
பருக்கள் குறைதல்: பலருக்கு முகப்பருக்கள் வருவதற்கு செரிமானக் கோளாறுகளே முக்கியக் காரணமாகும். இந்தத் தண்ணீர் செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலம் பருக்கள் வருவதைக் குறைக்கிறது. ஹார்மோன் சமநிலையின்மை உள்ளவர்களுக்கும் இது நன்மை பயக்கும்.
மலச்சிக்கல் நிவாரணம்: வெந்தயத்தில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இருப்பதால், இது மலச்சிக்கல் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகிறது.
செரிமான நொதிகளின் அதிகரிப்பு: சீரகம் வயிற்றில் உள்ள செரிமான நொதிகளின் அளவை அதிகரிக்கிறது. இதனால் செரிமானக் கோளாறுகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
தைராய்டு மற்றும் PCOD உதவி: கொத்தமல்லி உடலில் தைராய்டு சம்பந்தமான பிரச்சனைகள் அல்லது PCOD போன்ற பிரச்சனைகள் இருந்தால் அதையும் சரிசெய்யும் தன்மை கொண்டது.
ஆகவே, இரவு முழுவதும் இந்த மூன்று விதைகளையும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அருந்துவதன் மூலம் உங்கள் முகம் பளபளப்பாகவும், சுருக்கங்கள் இல்லாமலும், இளமையான தோற்றத்துடனும் இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.