/indian-express-tamil/media/media_files/2025/05/15/YLlFdelnWum62hn8X8oD.jpg)
கோடை காலத்தில் பலரும் வேர்க்குரு பிரச்சனையால் பாதிக்கப்படுவதாக மருத்துவர் ஜெயரூபா தெரிவித்துள்ளார். அதன்படி, வியர்வை நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால் வேர்க்குரு உருவாகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனடிப்படையில் வியர்வை நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் வேர்க்குருவை தடுக்க முடியும் என்று மருத்துவர் ஜெயரூபா அறிவுறுத்துகிறார். இதற்காக உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
அந்த வகையில், வெயில் காலம் முழுவதும் காட்டன் ஆடைகளை உடுத்தலாம். மேலும், நலங்கு மாவு தேய்த்துக் குளிக்கலாம் என்று மருத்துவர் ஜெயரூபா பரிந்துரைக்கிறார். இது வியர்வை நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், வேர்க்குரு பாதிப்பு வந்துவிட்டால் சில வழிமுறைகளை பின்பற்றலாம். குறிப்பாக, நுங்கு தண்ணீரை வெளிப்புறமாக பூசலாம் என்று மருத்துவர் ஜெயரூபா குறிப்பிட்டுள்ளார். இதேபோல், வேப்பிலையை நன்றாக கொதிக்க வைத்து, அதன் தண்ணீரையும் வேர்க்குரு இருக்கும் இடங்களில் தடவலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது தவிர சந்தனத்தையும் பன்னீருடன் சேர்த்து பூசலாம் என்று மருத்துவர் ஜெயரூபா தெரிவித்துள்ளார். இவற்றை பயன்படுத்துவதன் மூலம் வேர்க்குரு பாதிப்பில் இருந்து விடுபட முடியும். ஆனால், பவுடர் உபயோகித்தால், அவை வியர்வை நாளங்களில் மேலும் அடைப்பை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரிக்கை விடுக்கிறார்.
நன்றி - SHREEVARMA Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.