இப்போது மூட்டுவலி வயதானவர்களை மட்டுமல்ல, 30 வயதிற்குள் உள்ள இளைஞர்களையும், பள்ளி மாணவர்களையும் பாதிக்க தொடங்கியுள்ளது. உடல் பருமன், ஹார்மோன் மாற்றங்கள், மரபணு பிரச்சனைகள், நீர்ச்சத்து குறைபாடு போன்ற காரணங்கள் மூட்டு தேய்மானத்திற்கும், வலிக்கும் காரணமாக இருப்பதாக டாக்டர் ஜெயரூபா ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் கூறுகிறார்.
Advertisment
முதலில் மூட்டு வலிக்கான முக்கிய காரணம் என்ன என்று பார்ப்போம்.
அதிக உடல் எடை, மூட்டுகளில் அதிக அழுத்தம்
ஹார்மோன் சமநிலை குன்றுதல்
மரபணு தொடர்பான பலவீனம்
போதிய நீர் குடிக்காமல் இருப்பது
கால்சியம் குறைவான உணவுப் பழக்கம்
இதுபோன்ற காரணங்களால் அதிகம் மூட்டு வலி உண்டாகிறது. இதனை இயற்கையாகவே சரிசெய்யலாம். மேலும் வலியை குறைக்க கால்சியம் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் (முடக்கத்தான் கீரை, முளைக்கட்டிய பயிறு, பப்பாளி) எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் சரியான உடற்பயிற்சி, தினசரி நடைபயிற்சி மேற்கொள்வது அவசியம்.
Advertisment
Advertisements
அதுமட்டுமின்றி வீட்டிலேயே பற்று மாதிரியும் செய்து போடலாம். அதனை எப்படி செய்வது என்று டாக்டர் ஜெயரூபா கூறுகிறார்.
தேவையான பொருட்கள்:
மூசாம்பரம் கடுக்காய் வெந்தயம் மஞ்சள்
செய்முறை
மூசாம்பரத்தை வெண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் கடுக்காய், வெந்தயம், மஞ்சளுடன் அரைத்து மூசாம்பரத்தை கலக்கவும். வெள்ளை துணியில் பொருத்தி, மூட்டுகளில் கட்டி வைத்தால் வீக்கம் குறையும்.
வாரத்தில் 5 நாட்கள் பயன்படுத்தலாம், ஒரு மணி நேரம் வைத்த பிறகு கழுவ வேண்டும். பின் மஹாராஜா தைலம் எடுத்து ஒரு நல்ல மசாஜ் செய்யவும். இப்படியே தொடர்ந்து செய்து வர வலி குறைவது தெரியும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.