/indian-express-tamil/media/media_files/2025/05/03/mjl4kNyPrSJ6LY4UvMaT.jpg)
பொதுவாக எல்லோரது சிறுநீரிலும் கல் வெளியேறும் என்று மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார். குறிப்பாக, இவை மைக்ரான் அளவில் தான் இருக்கும். இதனால் இவை கண்களுக்கு தெரிவதில்லை. இதற்கான அறிகுறிகளும் இருப்பதில்லை. ஆனால், மில்லி மீட்டர் அளவில் இந்த கல் பெரிதாகும் போது அவை பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் கூறுகிறார்.
இது போன்ற சிறுநீரக பாதிப்புகளை ஆரம்ப கட்டத்தில் இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம். பெரும்பாலும், சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, தொற்று நோய்களின் காரணமாக சிறுநீரகத்தில் பாதிப்பு உருவாகும் வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மரபணு ரீதியாக சிலருக்கு சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளியேறினாலும் கூட, குறைவாகவே தண்ணீர் குடித்தால் சிறுநீரகத்தில் கல் வரும். இது தவிர அதிகப்படியான உப்பு மற்றும் புரதம் சேரும் போது சிறுநீரக கல் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார்.
எனவே, சிறுநீரக கல் வராமல் தடுப்பதற்கு நாம் மேற்கொள்ள வேண்டிய சில வழிமுறைகளை மருத்துவர் கார்த்திகேயன் எடுத்துரைக்கிறார். அதன்படி, வெயில் காலத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 12 கப் தண்ணீர் குடிக்க வேண்டும். அடுத்தபடியாக, சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்த்து விடலாம்.
மேலும், உப்பு அதிகமாக இருக்கும் ஊறுகாய், சிப்ஸ் வகைகள், பேக்கரி உணவுகளையும் சாப்பிடக் கூடாது. இதேபோல், பீட்ரூட், முள்ளங்கி, சாக்லேட் ஆகியவற்றில் நிறைய ஆக்ஸ்லேட்டுகள் இருக்கின்றன. இது சிறுநீரக கல்லை உருவாக்குவதால், இத்தகைய உணவுகளை தவிர்ப்பது நல்லது என்று மருத்துவர் கார்த்திகேயன் அறிவுறுத்துகிறார்.
நன்றி - Doctor Karthikeyan Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.