/indian-express-tamil/media/media_files/2025/01/21/LrGn9M0z84kZZRuTMHtc.jpg)
இருதய நோய் வருவதற்கான முக்கியமான காரணியாக பார்க்கப்படுவது இரத்தத்தில் கொழுப்புகளின் அளவு அதிகரித்தல் என மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும், இரத்த குழாய்களில படிந்திருக்கும். இதற்கான ஆரம்ப அறிகுறிகள் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, கை மற்றும் கால்களில் சில பிரச்சனைகள் ஏற்படும். அதன்படி கை, கால்களில் கூசும் உணர்வு அதிகரிக்கத் தொடங்கும். குறைவான இரத்த ஓட்டம் காரணமாக இது அதிகரிக்கும். அப்படி இருக்கும் போது கொலஸ்ட்ரால் அளவை பரிசோதிக்க வேண்டும்.
இதேபோல், கை, கால்கள் அடிக்கடி குளிர்ச்சியாக இருக்கும். இதுவும் இரத்த ஓட்டம் தடைபடுவதால் உருவாகும். கொழுப்பு அதிகரிக்கும் போது இரத்த ஓட்டம் தடைபடும்.
கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது சிலருக்கு சோர்வு ஏற்படும். மேலும், கைகள் மரத்துப் போனது போன்று தோன்றும். இரவு உறங்கும் போது மற்றும் காலை விழித்த உடன், கை, கால்களில் எரிச்சல் உணர்வு இருக்கும். இதுவும் கொழுப்பு அதிகரித்ததற்கான காரணமாக இருக்கும்.
கை, கால்கள் நீல நிறத்திற்கு மாறினாலும் இரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டதாக இருக்கும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மார்பில் அசௌகரியம், மூச்சுத் திணறல், தலைச் சுற்றல் ஆகியவையும் கொலஸ்ட்ரால் இருந்தால் ஏற்படும். இது போன்ற அறிகுறிகள் இருப்பவர்களும் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்.
ஆண்களுக்கு கொலஸ்ட்ரால் ஏற்பட்டு இருதயம் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் எனக் கூறும் மருத்துவர் கார்த்திகேயன், இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.