/indian-express-tamil/media/media_files/2025/04/04/LtboYdGwATko9Gsahc3Z.jpg)
சைனஸ் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தங்கள் வீட்டில் வைத்தே சுமார் 5 நிமிடங்களில் இதற்கு தீர்வு காண முடியும் என்று மருத்துவர் மனோஜ் குமார் தெரிவித்துள்ளார். அதிலும், ஆவி பிடிப்பதன் மூலம் இதற்கு எளிமையாக தீர்வு காண முடியும்.
குறிப்பாக, சளி பிடித்து தலை பாரமாக இருந்தால் கட்டாயமாக ஆவி பிடிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சூழலில் ஆவி பிடிக்கும் போது அந்த புகையை எவ்வாறு உள்ளே இழுத்து, பின்னர் வெளியிடுகிறோம் என்பது முக்கியம் என அவர் தெரிவித்துள்ளார்.
மூக்கை சுற்றி இருக்கும் சளி கரைந்து வெளியேற வேண்டும் என்பதற்காக தான் ஆவி பிடிக்கிறோம் என மருத்துவர் மனோஜ் குமார் கூறுகிறார். எனவே, ஆவியை வாய் வழியாக பிடித்து வெளியேற்றுவதில் பயன் இல்லை. காரணம் வாயில் இழுக்கும் புகை நுரையீரலுக்கு மட்டும் செல்லும் என்றும், இதனால் சைனஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக, சுமார் ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இது நன்றாக கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விட்டு, அதில் நாம் பயன்படுத்தும் மருந்தை தேவையான அளவு சேர்க்க வேண்டும். அதன் பின்னர், ஆவி பிடிக்கும் போது அந்த புகையை மூக்கால் சுவாசித்து, வாய் வழியாக வெளியேற்ற வேண்டும் என மருத்துவர் மனோஜ் குமார் அறிவுறுத்துகிறார்.
இவ்வாறு 5 நிமிடங்களுக்கு பின்பற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை இவ்வாறு ஆவி பிடித்தால் சைனஸ் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று மருத்துவர் மனோஜ் குமார் குறிப்பிடுகிறார்.
நன்றி - Manoj ENT Speciality Centre Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.