பொடுகு தொல்லையை விரட்டும் செம்பருத்தி இலைகள்; வாரம் ஒரு முறை இப்படி யூஸ் பண்ணுங்க: டாக்டர் மைதிலி அட்வைஸ்
பொடுகு தொல்லை மற்றும் முடி உதிர்வு பிரச்சனைகளை போக்கும் வகையில் செம்பருத்தி இலைகளில் இருந்து எவ்வாறு ஹேர்பேக் தயாரிக்கலாம் என்று மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். அதனை இந்தக் குறிப்பில் காணலாம்.
பொடுகு தொல்லை மற்றும் முடி உதிர்வு பிரச்சனைகளை போக்கும் வகையில் செம்பருத்தி இலைகளில் இருந்து எவ்வாறு ஹேர்பேக் தயாரிக்கலாம் என்று மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். அதனை இந்தக் குறிப்பில் காணலாம்.
செம்பருத்தி இலைகளில் நமது தலை முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் ஆற்றல் இருக்கிறது என்று மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். குறிப்பாக, இதன் பல்வேறு மருத்துவ குணங்கள் குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Advertisment
அதன்படி, செம்பருத்தி இலைகளில் வைட்டமின் சி ஊட்டச்சத்து அதிகமாக இருக்கிறது. இது நம் உடலில் கொலஜன் உற்பத்தியை சீராக வைக்க உதவுகிறது. இது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் தலை முடி வளர்ச்சியையும் தூண்டுகிறது. ஏனெனில், இதில் இருக்கும் அமினோ அமிலங்கள், நம்முடைய தலை முடியின் வேர்ப்பகுதியை உறுதியாக மாற்றுகின்றன. அந்த வகையில் செம்பருத்தி இலையில் இருந்து ஹேர்பேக் தயாரிக்கலாம் என்று மருத்துவர் மைதிலி கூறுகிறார்.
செம்பருத்தி இலைகளை இரண்டு கைப்பிடி அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் ஒரு கைப்பிடி அளவிற்கு கறிவேப்பிலை இலைகளையும் எடுத்துக் கொள்ளலாம். இவை இரண்டையும் நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
இவற்றை மிக்ஸியில் போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக பசை பதத்திற்கு அரைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நமது முடிக்கு தேவையான ஹேர்பேக் ரெடியாகி விடும். இதனை தலை முடியின் அடிப்பகுதியில் இருந்து நுனிப்பகுதி வரை தேய்த்து விட்டு சுமார் 45 நிமிடங்களுக்கு அப்படியே ஊறவைக்க வேண்டும்.
Advertisment
Advertisements
அதன் பின்னர், சுடுதண்ணீரில் தலைக்கு சீவக்காய் தேய்த்து குளித்து விடலாம் என்று மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். இந்த ஹேர்பேக்கை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ச்சியாக பயன்படுத்தலாம். அவ்வாறு செய்யும் போது தலை முடி உதிர்வு, இளநரை, பொடுகு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று அவர் கூறுகிறார்.
இவ்வாறு இயற்கையாக வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட ஹேர்பேக்குகளில் இரசாயனங்கள் எதுவும் கலக்காததால், ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்படும் என்ற கவலையும் இருக்காது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.