/indian-express-tamil/media/media_files/2025/02/08/4coFCQ0piePd9z6KjLry.jpg)
இரசாயனங்கள் இல்லாமல் இயற்கையான முறையில் கிடைக்கக் கூடிய பொருட்களை முகத்திற்கு பயன்படுத்தும் போது பக்க விளைவுகள் ஏற்படாது என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
அதன்படி, முதலில் முகத்தை நன்றாக தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். அதன் பின்னர், வாழை அல்லது பப்பாளி அல்லது ஆரஞ்சு என இவற்றில் ஏதாவது ஒரு பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பழங்களை கொண்டு முகத்தில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
குறிப்பாக, கருமை அதிகமாக இருக்கும் இடங்களில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இதையடுத்து, சுமார் 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு கழுவி விட வேண்டும்.
இதன் பின்னர், மஞ்சஸ்தி பொடியில் தக்காளி சாறு அல்லது எலுமிச்சை சாறு ஏதேனும் ஒன்று மற்றும் தண்ணீர் கலந்து முகத்தில் தேய்க்க வேண்டும். இதனையும் 30 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இவை முகத்தில் இருக்கும் டெட் செல்களை நீக்கி விடும். இதனால் முகமும் பார்ப்பதற்கு பொலிவாக இருக்கும்.
இறுதியாக சிறிது நேரம் ஆவி பிடித்து, முகத்தை காட்டன் துணி கொண்டு துடைக்க வேண்டும். இதன் மூலம் நம் முகம் பார்ப்பதற்கு பளிச்சென பொலிவாக மாறிவிடும்.
நன்றி - Dr.Nithya's Varam Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.