Advertisment

நீரிழிவு நோய்க்கு தீர்வு; 5 கிராம் இந்தப் பொடி... தினமும் 2 வேளை: மருத்துவர் நித்யா

ஆவாரம் பூவில் இருக்கும் மருத்துவ குணங்கள் குறித்தும், அவை சர்க்கரை நோய்க்கு எவ்வாறு பயன்படுகிறது என்றும் மருத்துவர் நித்யா குறிப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Doctor nithya

சித்த மருத்துவத்தை பொறுத்தவரை பல்வேறு மருந்துகளில் ஆவாரம் பூ பயன்படுத்தப்பட்டு வருவதாக மருத்துவர் நித்யா கூறுகிறார். 

Advertisment

பொங்கல் பண்டிகை சமயத்தில் ஆவாரம் பூ அதிகளவில் கிடைக்கும். கண்ணில் ஏற்படும் எரிச்சல், சருமம் தொடர்பான பிரச்சனைகள், சர்க்கரை நோய் என பலவற்றுக்கு ஆவாரம் பூ தீர்வாக அமைகிறது எனவும் மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.

சித்த மருத்துவத்தில் ஆவாரை குடிநீர் என்ற பொருள் சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முதன்மையாக ஆவாரம் பூ சேர்க்கப்பட்டிருக்கும். இந்த பொடியை 5 கிராம் அளவிற்கு எடுத்து, மூன்று கிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். 

இந்த நீர் ஏறத்தாழ 1 கிளாஸ் அளவிற்கு வற்றியதும் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து ஆறவிட வேண்டும். அதன் பின்னர், இதனை குடிக்கலாம். குறிப்பாக தினமும் இரண்டு வேளை உணவுக்கு முன்னர் இதை குடிக்க வேண்டும் என மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisement

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Early symptoms of diabetes Hazardous effects of diabetes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment