/indian-express-tamil/media/media_files/2025/04/20/oKM6lAYQvAmoq0XzPKTi.jpg)
தாய்ப்பால் சுரப்பதற்கும், சுரக்கும் தாய்ப்பாலை அதிகப்படுத்துவதற்கும், தரமான தாய்ப்பால் கிடைப்பதற்கும் பூண்டின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது என்று மருத்துவர் செல்வ சண்முகம் கூறுகிறார்.
இதேபோல், வெந்தயம், கருப்பு உளுந்து மற்றும் பச்சை பயிறு ஆகிய பொருட்களும் தாய்ப்பாலை அதிகமாக சுரக்க வைக்க உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்காக ஒரு கஞ்சி தயாரித்து குடிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, புழுங்கல் அரிசி, பூண்டு, கொஞ்சமாக பாசி பயிறு, சீரகம் மற்றும் தேவைக்கேற்ப சிறிதளவு இஞ்சி ஆகிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின்னர், இந்தக் கலவை ஆறி விடுவதற்கு முன்பாக தேங்காய் துருவல் அல்லது தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் கஞ்சி தயாராகி விடும். இதனை பருப்பு துவையல் அல்லது வெல்லத்துடன் சேர்த்து காலை 11 மணிக்கு சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் செல்வ சண்முகம் பரிந்துரைக்கிறார். குறிப்பாக, காலை உணவை சுமார் 7:30 மணிக்கு எடுத்துக் கொண்டால், 11 மணிக்கு இந்தக் கஞ்சியை சாப்பிடும் போது தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் தொடர்ச்சியாக மருந்து எடுத்துக் கொள்பவர்கள், இந்தக் கஞ்சியை குடிப்பதற்கு முன்பாக மருத்துவர்களிடம் ஆலோசனை செய்து விட்டு சாப்பிடலாம்.
நன்றி - Doctor Vikatan Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.