பலரது வாழ்வில் ஒரு முறையாவது பற்களின் ஈறுகளில் இருந்து இரத்தக் கசிவு ஏற்பட்டிருக்கும். இந்த இரத்தக் கசிவுகளுக்கான காரணம் மற்றும் அவற்றை எப்படி தடுப்பது என மருத்துவர் ஷர்மிகா டெய்சி ஹாஸ்பிட்டல் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
ஈறுகளுக்கும், பற்களுக்கும் இடையே இருக்கும் பகுதியில் உணவு பொருட்கள் சிக்கிக் கொள்ளும் போது வீக்கம் உண்டாகும். இதனால் தான் அப்பகுதியில் இருந்து இரத்தம் வருகிறது என மருத்துவர் கூறுகிறார். இது தவிர சிலர் வாய் வழியாக மூச்சு விடுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் இரவு முழுவதும் தூங்கும் போது இவ்வாறு வாய் வழியாக மூச்சு விட்டால், ஈறுப்பகுதிகளில் ஈரப்பதம் இல்லாமல் போய் விடும். இதனாலும் இரத்தக் கசிவு ஏற்படலாம்.
வைட்டமின் சி குறைபாடு இருப்பவர்களுக்கும், கர்ப்பமாக இருப்பவர்களுக்கும் இது போன்று ஈறுகளில் இருந்து இரத்தக் கசிவு உருவாகும். இதேபோல், சில மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளின் காரணமாகவும் ஈறு வீக்கம் ஏற்பட்டு இரத்தம் கசியும்.
இதுமாதிரி பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள மருத்துவர் ஷர்மிகா எண்ணெய் வைத்து வாய் கொப்பளிக்க வேண்டும் என்கிறார். தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் எடுத்து அதில் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தினமும் வாய் கொப்பளிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் இரத்த கசிவு சரியாகும். ஒரு வாரம் செய்தாலே நல்ல பலன் கிடைக்கும்.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.