காலையில் வெறும் வயிற்றில் காஃபி, டீ... இந்த அபாயம் இருக்கு: டாக்டர் ஷர்மிகா
Irritable bowel syndrome என்ற பிரச்சனை குறித்து மருத்துவர் ஷர்மிகா விளக்கம் அளித்துள்ளார். மேலும், இதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிலருக்கு சாப்பிட்ட உடனே மோஷன் போகும் பிரச்சனை இருக்கும். குறிப்பாக, காலை, மதியம் மற்றும் இரவு நேரம் என எப்போதும் சாப்பிட்டாலும் மோஷன் போகும் பழக்கத்தால் அவதிப்படுவார்கள். இதனை Irritable bowel syndrome எனக் கூறுவதாக மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார்.
Advertisment
இதனை சாதாரண விஷயம் எனக் கூறி அப்படியே விடக் கூடாது என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாம் சாப்பிடும் மாவுச் சத்து, புரதச் சத்து மற்றும் நார்ச்சத்து ஆகிய அனைத்தும் வயிற்றுகுள் சென்றதும் குறைந்தது இரண்டரை மணி நேரமாவது உடலுக்குள் இருக்க வேண்டும்.
அப்படி இருக்கும் போது தான், உணவில் இருக்கும் நல்ல விஷயங்கள் இரத்தத்தில் கலந்து அனைத்து உறுப்புகளுக்கும் சென்றடையும் என்று மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார். உதாரணத்திற்கு, தலை முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்காக உணவுகளை எடுத்துக் கொண்டால் அதனுடைய பலன்கள் நமக்கு கிடைக்காமல் போய் விடும்.
இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு ஒரு காரணம் இருப்பதாக மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார். அதன்படி, பல ஆண்டுகளாக காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் காபி அல்லது டீ குடிப்பவர்களுக்கு Irritable bowel syndrome இருக்கக் கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
இது தவிர வேறு சில காரணங்களாலும் Irritable bowel syndrome வரலாம். ஆனால், இது பிரதான காரணமாக பலரிடம் காணப்படுகிறது. எனவே, காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள், அதனை கைவிட வேண்டும் என்று மருத்துவர் ஷர்மிகா அறிவுறுத்துகிறார்.
மேலும், இந்த பிரச்சனை தொடர்ச்சியாக இருக்கும்பட்சத்தில் கட்டாயமாக உரிய மருத்துவரை அணுகி உடனடி ஆலோசனை பெறுவது அவசியம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
நன்றி - DAISY HOSPITAL Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.