/indian-express-tamil/media/media_files/2025/05/11/6SBZC8Xj9ltRMIeXfwDM.jpg)
கற்றாழையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, கற்றாழையை தன்னுடைய சரும பராமரிப்பில் நாள்தோறும் பயன்படுத்துவதாக மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். இதன் பயன்கள் குறித்தும் அவர் விளக்கம் அளிக்கிறார்.
அதன்படி, கருமையான சருமத்தை பொலிவாக்கவும், வறட்சியான சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கவும் கற்றாழை பெரிதும் பயன்படுகிறது. இது தவிர சருமத்தில் ஏற்படும் அழற்சியை குணமாக்கவும் கற்றாழையை பயன்படுத்தலாம் என்று மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார்.
இந்தக் கற்றாழையை பயன்படுத்துவதற்கு என சில வழிமுறைகள் இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், கற்றாழையின் உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து குறைந்தபட்சம் 7 முறை தண்ணீரில் கழுவ வேண்டும். அதன் பின்னர், இந்த ஜெல்லை அரைத்து சருமத்தில் தடவலாம் என்று மருத்துவர் ஷர்மிகா அறிவுறுத்துகிறார்.
இதேபோல், கற்றாழையை 4 துண்டுகளாக வெட்டி குளிக்கும் தண்ணீரில் போடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு மருத்துவ குணம் வாய்ந்த மூலிகையாக கற்றாழை கருதப்படுகிறது. எனினும், சிலருக்கு கற்றாழை ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்று கருதினால் பேட்ச் டெஸ்ட் செய்த பின்னர் அதை உபயோகிக்கலாம் என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வாறு கற்றாழையை பயன்படுத்தும் போது மதியத்திற்குள் உபயோகிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார். ஏனெனில், இதில் இருக்கும் குளிர்ச்சித் தன்மை சிலருக்கு சளி, இருமல் போன்றவற்றை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.
நன்றி - PaleoLife Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.