உடல் மற்றும் சருமத்திற்கு சரியான பலன் தரும் உணவு மற்றும் தீர்வு எது என்று பல ஆலோசனை கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் எண்ணெய் அல்லது கலோஞ்சி எண்ணெய்யை குடித்தால், சருமம், குடல் மற்றும் கூந்தல் சதைகளுக்கு அதிக நன்மை அளிப்பதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து பருக்கள், ஹெக்ஷிமா பிரச்சனை இருந்தால் பயன்படுத்தலாம். வழக்கமான ஜீரண பிரச்சனைகள் , வயிற்று உப்புதல், ஜீரணப் பிரச்சனை, ஐ.பி.எஸ் அறிகுறிகளுக்கு தீர்வாக இருக்கும். முட்டி வலி மற்றும் ஆர்த்ரைடிஸ்-க்கு நிவாரணம் கொடுக்கும். தொடர்ந்து நோய்கள் உருவாகாமல் தடுக்கும்.
இந்நிலையில் இதுபோன்ற சிக்கலில் இருந்து நம்மை விடுவிக்கும். 2 முதல் 3 வாரங்களில் மாற்றம் தெரியும்.
இந்த எண்ணெய்யில் தைமோகுவினோன், தைமால், தைமோஹைட்ரோகுவினோன் உள்ளது. இது இருப்பதால் ஆண்டி ஆக்ஸிண்ட், வீக்கத்திற்கு எதிரான பண்புகள் கொண்டது. இந்த எண்ணெய்யை நாம் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
இதில் உள்ள வீக்கத்திற்கு எதிரான பண்புகள், இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் பருக்கள் மற்றும் எக்ஸிமாவை குணமாக்கும். மேலும் இது நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு உதவியாக செயல்படும்.
Read in english