/indian-express-tamil/media/media_files/2024/10/31/IbolpHQ5mTjumi0kci4d.jpg)
பூண்டு சாப்பிட்டு வர மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும் என நீண்ட காலமாக கூறப்படுகிறது. இது உண்மையா? பூண்டின்மருத்துவ குணங்கள் பற்றி அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக மருத்துவர் அருண்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
அவரின் யூடியூப் பக்கத்தில் பேசிய அவர்,"பூண்டு சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் முழுமையாக போய்விடும். காணாமல் செய்து விடும் என்று கூறுவது மிகைப்படுத்தப்பட்டது. அது ஆராய்ச்சிகளில் நிரூபணம் ஆக வில்லை. மிக அதிக அளவில் பூண்டு எடுத்துக் கொண்டால் கூட 8-10 மி கூட கொலஸ்ட்ரால் குறைவது இல்லை. கொலஸ்ட்ராலை குறைக்கும் குணங்கள் அந்தளவு பூண்டில் இல்லை என்பது தான் உண்மை.
பூண்டிலும் சில இதய சார்ந்த ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. பூண்டை 500 மி.கிராமில் இருந்து 1 கிராம் அளவு வரை உணவில் சேர்த்து ஆய்வு செய்த போது சில இதய சார்ந்த பிரச்சனைகள் குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தினமும் உணவில் பூண்டு சேர்ப்பது 5-10 சதவீதம் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறைவதாகவும், ரத்தம் உறையும் தன்மை குறைவதாகவும் தெரிய வந்துள்ளது.
இவ்வளவு தான் நடந்துள்ளது. ஆனால் பூண்டு சாப்பிட்டால் முற்றிலுமாக குணமடைந்துவிடும் என்று இல்லை. மருந்து, மாத்திரரைகளை நிறுத்திவிடக் கூடாது. பூண்டு சாப்பிட்டால் மாரடைப்பு வராது, முற்றிலுமாக குணமடைந்துவிடும் என்றளவுக்கு மருத்துவ குணங்கள் இல்லை. ஆனால் சில இதய ஆரோக்கியத்திற்கு பூண்டு நன்மை தருகிறது" என மருத்துவர் விளக்கயுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.