பொதுவாக செல்போன்கள் பயன்படுத்துவதால் புற்றுநோய் வரும் என்ற ஒரு செய்தி பரவலாக பேசப்படுகிறது. இந்நிலையில் தற்போது அடுத்த கட்டமாக 5 ஜி தொழில் நுட்பத்துக்குள் நிழைந்திருக்கிறோம். இந்நிலையில் 5ஜி போன்கள் சந்தைகளில் அறிமுகமாகி உள்ளது. இந்நிலையில் இந்த போன்களை பயன்படுத்தும்போது, அதில் வெளிப்படும் கதிர்விச்சால் புற்றுநோய் ஏற்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
2ஜி, 3ஜி, 4ஜி போன்கள் வெளியாகும் கதிர்கள் 0.7–2.7 GHz உள்ளே இருக்கிறது. இந்நிலையில் 5 ஜிபோன்களில் வெளியாகும் கதிர்களின் அளவு 80 GHz ஆக உள்ளது. இந்நிலையில் இது குறைந்த அளவிலானது. உலக சுகாதார நிறுவனம் 1996 ஆம் ஆண்டு முதல் இதுபோன்ற தொழில்நுட்ப கருவிகள் வெளிப்படுத்தும் கதிர்கள் ஏற்படுத்தும் விளைவுகளை ஆராய பல்வேறு முயற்சிகள் எடுத்துள்ளது.
இதில் செல்போன்களால் புற்று நோய் ஏற்படும் சாத்தியம் குறைவு மேலும் புற்றுநோய் ஏற்பட பல்வேறு காரணிகள் உள்ளது என்று தெரியவந்துள்ளது. லண்டனில் நடைபெற்ற சில ஆய்வுகளில் செல்போன்கள், மூளை கட்டியை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு சரியான சான்றுகள் இல்லை என்பதால், செல்போன்களால் புற்றுநோய் ஏற்படும் என்பது தொடர்பாக மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.