எலுமிச்சை தோல் போதும்... இப்படி செய்தால் கால்மிதியை ஈசியா க்ளீன் பண்ணலாம்!
நம் வீட்டில் பயன்படுத்தும் மிதியடிகளை எப்படி தான் துவைத்தாலும் அதில் உள்ள அழுக்குகள் போகாது பழையது போலவே இருக்கும். சில பேர் தினமும் துவைப்பார்கள். அதுமட்டுமில்லாமல் துவைப்பதற்கு ரொம்ப கஷ்டப்படுவார்கள். இந்த மாதிரி பிரச்னைகள் இல்லாமல் ஈசியாக எப்படி துவைப்பது என்று நிலா குட்டி என்ற யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பற்றி இந்தப் பதிவில் தெரிந்துகொள்வோம்.
Advertisment
முதலில் ஒருவாளி எடுத்து அதில் தண்ணீர் நிரப்பி, அழுக்கு படிந்த கால்மிதியடியை போட்டு அரை மணி நேரம் ஊறவிட வேண்டும். இந்த மாதிரி செய்வதால், கால்மிதியடியில் இருக்கக் கூடிய அழுக்கு, மண் போன்றவை நீங்கும். பின் அதிகம் கொதிக்க விடாமல் துவைக்கும் அளவிற்கு சூடாக தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும். எலுமிச்சை சாறு 1 மூடி, துணி துவைக்கும் பவுடர்2ஸ்பூன், சோடா சேர்த்து ஒரு பெரிய குச்சியை விட்டு கலந்துவிடவும். பின்பு அதில் மிதியடிகளை எடுத்து ஊறவிடவும். அரை மணி நேரம் நன்றாக ஊறவேண்டும். ஊரும்போதே அந்த மேட்டில் உள்ள அழுக்குள் முழுவதும் தண்ணீரில் இறங்கி விடும். பின்புதண்ணீரை விட்டு மேட்டை எடுக்கவும். அழுக்கு தண்ணீரை கீழ் ஊறிவிடவும்.
மீண்டும் தண்ணீரை வாளியில் ஊற்றி மேட்டை அதில் போட்டு அலசி விடவும். அவ்வளவு ஏன் பெரிய கனமான பாத்திரத்தில் ஊறவிட்டால் அதில் ஏறி நின்று கால்களால் அழுத்தினால் அதிலிருந்து அழுக்குகள் நீங்கிவிடும். பின்பு ஒரு வாளியில் தண்ணீரை ஊற்றி அதில் மேட்களை போட்டு மறுமுறை அலசிவிடவும் சரியாக இருக்கும். பின் அதிலிருந்து அழுக்கு நிறம் போகும் வரை அலசிக்கொள்ளவும். பின் நல்ல வெயிலில் போட்டு காயவிட்டால் போதும் நன்றாக காய்ந்து விடும் சரியாக இருக்கும்.