முகத்தில் வழுவழுன்னு எண்ணெய் பசை... ஐஸ் கட்டி, புதினா வச்சு இப்படி செஞ்சு பாருங்க: டாக்டர் கார்த்திகேயன் சொல்லும் டிப்ஸ்

உணவுப் பழக்கவழக்கத்தாலும் வெயிலில் செல்வதால் முகத்தில் வழியும் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்துவதற்கு டாக்டர் கார்த்திகேயன் ஐஸ்கட்டி, புதினா வைத்து ஒரு டிப்ஸ் கூறியுள்ளார். அது என்ன என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
oily skin care dr karthikeyan

முகத்தில் வழியும் எண்ணெய் பசையைப் போக்க என்ன செய்யலாம் என்பது குறித்து டாக்டர் கார்த்திகேயன் கூறியதை இங்கே பார்க்கலாம்.

முகத்தில் எண்ணெய் பசை ஏற்படுவது என்பது மரபணு ரீதியாக தீர்மாணிக்கப்படுகிறது. சிலருக்கு, எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட உணவு சாப்பிடுதல், எண்ணெய்யில் செய்த உணவுகளை சாப்பிடும் உணவுப் பழக்கவழக்கத்தாலும் வெயிலில் செல்வதால் முகத்தில் வழியும் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்துவதற்கு டாக்டர் கார்த்திகேயன் ஐஸ்கட்டி, புதினா வைத்து ஒரு டிப்ஸ் கூறியுள்ளார். அது என்ன என்று பார்ப்போம்.

Advertisment

முகத்தில் வழியும் எண்ணெய் பசையைப் போக்க என்ன செய்யலாம் என்பது குறித்து தனது யூடியூப் சேனலில் டாக்டர் கார்த்திகேயன் கூறியதை இங்கே பார்க்கலாம்.

முகத்தில் எண்ணெய் பசை ஏற்படுவது என்பது மரபணு ரீதியாக தீர்மாணிக்கப்படுகிறது. சிலருக்கு, எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட உணவு சாப்பிடுதல், எண்ணெய்யில் செய்த உணவுகளை சாப்பிடும் உணவுப் பழக்கவழக்கத்தாலும் வெயிலில் செல்வதால் முகத்தில் எண்ணெய் பசை வழிகிறது. இதை எளிதில் கட்டுப்படுத்திவிடலாம். முகத்தில் தொடர்ந்து வழியும் எண்ணெய்ப் பசையை நீக்குவது, பராமரித்தல் என்பது முக்கியம். 

Advertisment
Advertisements

முகத்தில் தொடர்ந்து எண்ணெய்ப் பசை வழியும் பிரச்னை இருக்கிறது என்றால் நம்முடைய தோலில், செபேசியஸ் சுரப்பி  (Sebaceous gland) என்று ஒரு சுரப்பி உள்ளது. இது இயற்கையாகவே எண்ணெய் திரவத்தை சுரந்துகொண்டிருக்கும். இது வெயிலில் இருந்து தோலைப் பாதுகாக்கிறது. இது அளவுக்கு மிஞ்சி போகும்போது, அழுக்குகளுடன் சேர்ந்து முகத்தில் பரு, அக்னி, பருக்கள் பெரியதாவது நடந்துகொண்டே இருக்கும். ஆனால், இதை தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

தினசரி சரும பராமரிப்பு என்பது மிக முக்கியம். 

ஃபிரிட்ஜில் வைத்து எடுக்கப்பட்ட சுத்தமான ஐஸ் கட்டியை முகத்தில் வைத்து ஒத்தி, மசாஜ் போல செய்யுங்கள். இதன் மூலம் தோலில் உள்ள நுண் ஓட்டைகள் அடைபட்டு எண்ணெய் வழிவது தடுக்கப்படும்.

அடுத்து புதினா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, பிறகு அந்த தண்ணீரை ஆற வைத்து, ஒரு பச்சு எடுத்து, அந்த தண்ணீரைத் தொட்டு முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால் முகத்தில் வழுவழுன்னு வழியும் எண்ணெய் பசையை நீக்கும் என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.

சோற்றுக் கற்றாழை ஜெல் எடுத்து, மஞ்சள் பகுதியை நீக்கி, நுங்கு மாதிரியான அந்த ஜெல்லை முகத்தில் தடவ வேண்டும். நன்றாக ஊறிய பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால் முகம் ஃபிரஷ்ஷாக இருக்கும்.

அதே போல, வெள்ளரிக்காயை தயிரில் ஊறவைத்து அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவைத்தபின், குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால் முகம் ஃபிரஷ்ஷாக இருக்கும் என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: