தேங்காய் எண்ணெய்யை தொப்புளில் விட்டு மசாஜ் பண்ணுங்க… ரத்தம் சுத்தமாகும்; டாக்டர் மைதிலி

இரவில் தூங்கப் போகும் முன் தொப்புளில் தேங்காய் எண்ணெய் தடவி, மசாஜ் செய்தால் இயற்கையான முறையில் ரத்தம் சுத்தமாகும் என்று டாக்டர் மைதிலி பரிந்துரைக்கிறார்.

இரவில் தூங்கப் போகும் முன் தொப்புளில் தேங்காய் எண்ணெய் தடவி, மசாஜ் செய்தால் இயற்கையான முறையில் ரத்தம் சுத்தமாகும் என்று டாக்டர் மைதிலி பரிந்துரைக்கிறார்.

author-image
WebDesk
New Update
dr mythili

டாக்டர் மைதிலி கூறியிருப்பதாவது: “தேங்காய் எண்ணெயில் எம்.சி.டி என்ற கொழுப்பு உள்ளது. தேங்காய் எண்ணெய்யை சமைலுக்கு பயன்படுத்துவதன் மூலம் மாரடைப்பு வராமல் தடுக்கும். சர்க்கரை அளவை சீராக வைக்கும். உடலுக்கு தேவையான ஸ்டமினாவைக் கொடுக்கும்” என்று பரிந்துரைக்கிறார்.

இரவில் தூங்கப் போகும் முன் தொப்புளில் தேங்காய் எண்ணெய் தடவி, மசாஜ் செய்தால் இயற்கையான முறையில் ரத்தம் சுத்தமாகும் என்று டாக்டர் மைதிலி பரிந்துரைக்கிறார்.

Advertisment

தமிழகத்தின் கடைக்கோடி தென் மாவட்டங்களிலும் கேரளாவிலும் மக்களின் உணவுகளில் தேங்காய் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. இந்த தேங்காயில் இருந்து எடுக்கப்படும் தேங்காய் எண்ணெய் சமையலுக்கு சமையலுக்கு பயன்படுத்தப்படுவது மட்டுமில்லாமல், உடலின் மருத்துவ ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெயின் நன்மைகள் குறித்து டாக்டர் மைதிலி தனது யூடியூப் சேனலில் (Dr.Mythili - Ayurveda Doctor & Dietitian) ஆலோசனைகளைக் கூறியுள்ளார். அதை அப்படியே இங்கே தருகிறோம்.

டாக்டர் மைதிலி கூறியிருப்பதாவது: “தேங்காய் எண்ணெயில் எம்.சி.டி என்ற கொழுப்பு உள்ளது. தேங்காய் எண்ணெய்யை சமைலுக்கு பயன்படுத்துவதன் மூலம் மாரடைப்பு வராமல் தடுக்கும். சர்க்கரை அளவை சீராக வைக்கும். உடலுக்கு தேவையான ஸ்டமினாவைக் கொடுக்கும்” என்று பரிந்துரைக்கிறார்.

Advertisment
Advertisements

அதே போல, தேங்காய் எண்ணெய்யை உடலுக்கு மேலே தடவும்போது, உடலை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.ட தலைக்கு தடவினால் முடி உதிர்வைத் தடுக்கும். முகத்துக்கு தடவினால் முகம் பொலிவாக பிரகாசமாக இருக்கும். முகப்பரு வந்தால் சீராகும் என்று டாக்டர் மைதிலி கூறுகிறார்.

அதே போல, இரவு தூங்க செல்வதற்கு முன்பு, தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன் எடுத்து தொப்புளில் விட்டு 5 நிமிடம் மசாஜ் செய்தால், ரத்தத்தை இயற்கையான முறையில் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். இதன் மூலம் எக்சிமா போன்ற தோல் வியாதிகள் வராமல் தடுக்கப்படும் என்று டாக்டர் மைதிலி கூறுகிறார்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: