/indian-express-tamil/media/media_files/2025/04/05/8bTpZMSjnRHQwdG99lLw.jpg)
கால் மூட்டுகளில் நீர் கோர்த்து இருக்கிறது என்றால் அதை சரி செய்ய பற்று போடுவது குறித்து ஏ.எஸ்.கே இன்ஃபர்மேஷன் என்ற யூடியூப் சேனலில் டாக்டர் நித்யா கூறியுள்ளார்.
கால் மூட்டுகளில் நீர் கோர்த்து இருக்கிறது என்றால் இந்த சூரணத்துடன் மஞ்சள் சேர்த்து தடவினால் நீர் வடிந்து சரியாகும் என்று டாக்டர் நித்யா ஆலோசனை வழங்குகிறார். அது என்ன சூரணம், அதனுடன் வேறு என்ன சேர்க்க வேண்டும் அதை எப்படி பற்று போட வேண்டும் என்பது குறித்து இங்கே பார்ப்போம்.
கால் மூட்டுகளில் நீர் கோர்த்து இருக்கிறது என்றால் அதை சரி செய்ய பற்று போடுவது குறித்து ஏ.எஸ்.கே இன்ஃபர்மேஷன் என்ற யூடியூப் சேனலில் டாக்டர் நித்யா கூறியுள்ளார்.
கால் மூட்டுகளில் நீர் கோர்த்து இருக்கிறது என்றால் அதை சரி செய்வதற்கு டாக்டர் நித்யா ஆலோசனை கூறுகையில், “கால் மூட்டுகளில் நீர் கோர்த்து இருந்தால், நாம் சில பற்று மருந்துகளை ஃபாலோ பண்ணலாம். கால் மூட்டுகளில் நீர் கோர்த்து இருந்தால், அடிப்படையில், திரிபலா சூரணத்துடன் சம அளவு மஞ்சள் கலந்து போட வேண்டும். படிகாரம் கொஞ்சம் பொடி செய்து சேர்க்க வேண்டும்.
திரிபலா சூரணம், மஞ்சள் சம அளவு, படிகாரம் கொஞ்சம் பவுடர் வடிவில் எடுத்து நன்றாகக் கலந்து, கால்களை நன்றாகக் கழுவிய பிறகு, இந்த கலவையை வெந்நீர் விட்டு கலந்து பற்று போல போட வேண்டும். முழங்காலில் மூட்டுப் பகுதியில் இருந்து கால் பாதம் வரை தடவி வந்தால் கால்களில் இருக்கக்கூடிய நீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிய ஆரம்பிக்கும். அதே போல, ஒரு நாளைக்கு எவ்வளவு சிறுநீர் கழிக்கிறீர்கள் என்பதையும் டெஸ்ட் பண்ணிக்கொள்ள வேண்டும். மருந்து எடுக்க எடுக்க சிறுநீரின் அளவு அதிகரித்தால் கொஞ்சம் கொஞ்சமாக வீக்கம் குறைய ஆரம்பிக்கும்.” என்று டாக்டர் நித்யா கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.