மருதாணி உடன் இதை சேருங்க… இயற்கையான ஹேர் டை இதுதான்; டாக்டர் நித்யா
நரைத்த முடியைக் கருமையாக்கிக் கொள்ள பலரும் ஹேர் டை அடிக்கிறார்கள். ஆனால், வேதிப் பொருட்கள் இல்லாத இயற்கையான முறையில் ஹேர் டை அடித்துக்கொள்ள விரும்புகிறார்கள். இதோ உங்களுக்காக டாக்டர் நித்யா, மருதாணி இலையை வைத்து ஒரு இயற்கையான ஹேர் டை பரிந்துரைக்கிறார்.
நரைத்த முடியைக் கருமையாக்கிக் கொள்ள பலரும் ஹேர் டை அடிக்கிறார்கள். ஆனால், வேதிப் பொருட்கள் இல்லாத இயற்கையான முறையில் ஹேர் டை அடித்துக்கொள்ள விரும்புகிறார்கள். இதோ உங்களுக்காக டாக்டர் நித்யா, மருதாணி இலையை வைத்து ஒரு இயற்கையான ஹேர் டை பரிந்துரைக்கிறார்.
டாக்டர் நித்யா, மருதாணி இலையை வைத்து ஒரு இயற்கையான ஹேர் டை எப்படி செய்வது என்று காஸ்மோ ஹெல்த் (@cosmohealthoffl) என்று யூடியூப் சேனலில் கூறியுள்ளார். அதை அப்படியே உங்களுக்கு இங்கே தருகிறோம்.
நரைத்த முடியைக் கருமையாக்கிக் கொள்ள பலரும் ஹேர் டை அடிக்கிறார்கள். ஆனால், வேதிப் பொருட்கள் இல்லாத இயற்கையான முறையில் ஹேர் டை அடித்துக்கொள்ள விரும்புகிறார்கள். இதோ உங்களுக்காக டாக்டர் நித்யா, மருதாணி இலையை வைத்து ஒரு இயற்கையான ஹேர் டை பரிந்துரைக்கிறார்.
Advertisment
நரை முடி வந்தாலே பலரும் கரை தட்டிய கப்பல் போல கவலைப்படுகிறார்கள். உடனே ஹேர் டை அடித்து நரைமுடியைக் கருமையாக்குகிறார்கள். ஆனால், அதில் பலரும் வேதிப் பொருள் இல்லாத இயற்கையான ஹேர் டை வேண்டும் என விரும்புகிறார்கள். அவர்களுக்காகவே, டாக்டர் நித்யா, மருதாணி இலையை வைத்து ஒரு இயற்கையான ஹேர் டை எப்படி செய்வது என்று காஸ்மோ ஹெல்த் (@cosmohealthoffl) என்று யூடியூப் சேனலில் கூறியுள்ளார். அதை அப்படியே உங்களுக்கு இங்கே தருகிறோம்.
பொதுவாக ஹேர் டை என்று என்று சொல்லும்போது ஹென்னா என்கிற மருதாணி இல்லாமல் இருக்காது. இந்த இயற்கையான ஹேர் டை செய்ய மருதாணி இலைப் பொடி, இதனுடன் அவுரி இலைப் பொடி, இரண்டையும் சேர்த்து பயன்படுத்தும்போது இயற்கையாகவே முடிக்கு கருமை நிறம் கிடைக்கும் என்று டாக்டர் நித்யா கூறுகிறார்.
Advertisment
Advertisements
மருதாணி இலைப் பொடி, இதனுடன் அவுரி இலைப் பொடி உடன் திரிபலா சூரணம் எடுத்துக்கொண்டு, இவற்றுடன் டீ டிக்காஷன் சேர்த்து இரவே கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். காலையில், இதனுடன் எலுமிச்சை சாறு கொஞ்சம் கலந்துகொள்ள வேண்டும். கிராம்பு பொடி அரை ஸ்பூன் அளவுக்கு கலந்துகொள்ள வேண்டும். இதையெல்லாம் நன்றாகக் கலந்து தலைமுடியில் தடவ வேண்டும். ட்தடவுவதற்கு முன்பு தலைமுடியை நன்றாக அலச வேண்டும். அதே போல தடவிய பிறகு, 3-4 மணி நேரம் கழித்து தலைமுடியை அலச வேண்டும். அவ்வளவுதான் உங்கள் நரைத்த தலைமுடி கருகருவென கருமையாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்கள்.