முகம் பளபளக்க வேண்டுமா? இந்த பொடியை ஃபேஸ்பேக் ஆக யூஸ் பண்ணுங்க; டாக்டர் நித்யா

முகம் பளபளப்பாகவும் பொலிவாகவும் இருக்க இந்த பொடியை ஃபேஸ்பேக் ஆக யூஸ் பண்ணி பாருக்கள் என்று டாக்டர் நித்யா ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த பொடியை ஃபேஸ்பேக் போட்டு பாருங்கல், நீங்களே ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.

முகம் பளபளப்பாகவும் பொலிவாகவும் இருக்க இந்த பொடியை ஃபேஸ்பேக் ஆக யூஸ் பண்ணி பாருக்கள் என்று டாக்டர் நித்யா ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த பொடியை ஃபேஸ்பேக் போட்டு பாருங்கல், நீங்களே ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
nithya

முகம் பளபளப்பாக இருக்க என்ன ஃபேஸ்பேக் போட்டால் சரியாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா, உங்களுக்காக டாக்டர் நித்யா, டாக்டர் இண்டெர்வியூ (@doctorinterview) என்ற யூடியூப் சேனலில் ஒரு சூப்பரான ஃபேஸ்பேக் பரிந்துரை செய்துள்ளார்.

முகம் பொலிவாக இருக்க, பல ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி இருப்பீர்கள். ஆனால், முகம் பளபளப்பாகவும் பொலிவாகவும் இருக்க இந்த பொடியை ஃபேஸ்பேக் ஆக யூஸ் பண்ணி பாருக்கள் என்று டாக்டர் நித்யா ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த பொடியை ஃபேஸ்பேக் போட்டு பாருங்கல், நீங்களே ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.

Advertisment

பலரும் தங்கள் முகம் பளபளப்பாகவும் பொலிவாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்காக, பியூட்டி பார்லரில் ஃபேஷியல் செய்துகொள்வது, ஃபேஸ் பேக்குகள் போடுகிறார்கள். ஆனால், அப்படியான ஃபேஸ் பேக்குகள் விலை அதிகமாக இருக்கின்றன. அதே நேரத்தில், எதிர்பார்த்த அளவுக்கு பலனும் கிடைப்பதில்லை. 

முகம் பளபளப்பாக இருக்க என்ன ஃபேஸ்பேக் போட்டால் சரியாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா, உங்களுக்காக டாக்டர் நித்யா, டாக்டர் இண்டெர்வியூ (@doctorinterview) என்ற யூடியூப் சேனலில் ஒரு சூப்பரான ஃபேஸ்பேக் பரிந்துரை செய்துள்ளார். அது என்ன ஃபேஸ் பேக் என்பதை இங்கே அப்படியே தருகிறோம்.

Advertisment
Advertisements

டாக்டர் நித்யா கூறுகையில்,  “வெறும் ஆவாரம்பொடியை ஃபேஸ் பேக்காக போட்டால் அவ்வளவு பொலிவைத் தருகிறது. சிலருக்கு முகத்தில் மங்கு இருக்கும். உடலில் நச்சு இருந்தால், ஸ்ட்ரெஸ் இருந்தால் இந்த மங்கு வரும். ட்ரீட்மெண்ட் எடுத்தாலும் மங்கு போகாது. அதே போல கண்களுக்கு கருவளையம் வரும். சிலருக்கு முகத்தில் சில இடங்களில் மட்டும் டார்க் ஆக தெரியும். அவற்றை சரி செய்யவும் இந்த ஆவாரை ஃபேஸ் பேக்கை பயன்படுத்தலாம். 

அதற்கு ஆவாரம் பொடியை மட்டும் முகத்தில் பூசிக் கொள்ளலாம். வீட்டிலேயே தயார் செய்வது என்றால், ஆவாரம் பூக்களைப் பறித்து நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டால் போதும். அந்த பொடியை முகத்தில் தடவிக்கொள்ளலாம். 

இது மட்டுமில்லாமல், ஆவாரம் பூ பொடியுடன், ரோஜா இதழ்கள், கோரைக் கிழங்கு, பூலான் கிழங்கு, சந்தனப் பொடி சேர்த்துக்கொள்ளலாம். இவற்றை பன்னீரில் கலந்தோ அல்லது பாலில் கலந்தோ ஃபேஸ் பேக் போடலாம். கொஞ்சம் தேன் கலந்தும் போடலாம். அதே போல, உடலில் வேறு எங்கேயாவது கருமை திட்டுகள் இருந்தாலும் இந்த பொடியைத் தடவலாம்.” என்று டாக்டர் நித்யா கூறுகிறார்.

 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: