கண்ணை சுற்றி கருவளையம்? வெறும் வெள்ளரி போதும்; செம்ம வீட்டு வைத்தியம்: சொல்லும் டாக்டர் ஷர்மிகா
கண்ணைச் சுற்றி கருவளையம் வந்துவிட்டதா கவலைப் படாதீர்கள், வெறும் வெள்ளரி போதும் கருவளையத்த் காணாமல் போகச் செய்யும் செம்ம வீட்டு வைத்தியம் ஒன்றை டாக்டர் ஷர்மிகா கூறுகிறார்.
கண்ணைச் சுற்றி கருவளையம் வந்துவிட்டதா கவலைப் படாதீர்கள், வெறும் வெள்ளரி போதும் கருவளையத்த் காணாமல் போகச் செய்யும் செம்ம வீட்டு வைத்தியம் ஒன்றை டாக்டர் ஷர்மிகா கூறுகிறார்.
கண்ணைச் சுற்றி கருவளையம் வந்துவிட்டால் அதை போக்குவதற்கு டாக்டர் ஷர்மிகா ஒரு செம்ம வீட்டு வைத்தியத்தை அவள் கிளிட்ஜ் (@AvalGlitz) என்ற யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.
கண்ணைச் சுற்றி கருவளையம் வந்துவிட்டதா கவலைப் படாதீர்கள், வெறும் வெள்ளரி போதும் கருவளையத்த் காணாமல் போகச் செய்யும் செம்ம வீட்டு வைத்தியம் ஒன்றை டாக்டர் ஷர்மிகா கூறுகிறார்.
Advertisment
கண்ணைச் சுற்றி கருவளையம் வந்துவிட்டால் அதை போக்குவதற்கு டாக்டர் ஷர்மிகா ஒரு செம்ம வீட்டு வைத்தியத்தை அவள் கிளிட்ஜ் (@AvalGlitz) என்ற யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.
டாக்டர் ஷர்மிகா கூறுகையில், “கண்களைச் சுற்றி ரொம்ப ரொம்ப நுண்மையான நரம்புகள் இருக்கிறது. அந்த கண்களை இன்னும் எப்படியெல்லாம் கெடுக்க முடியுமோ அப்படியெல்லாம் கெடுத்து வைத்திருக்கிறோம். போன் பார்க்கிறது, டிவி பார்க்கிறது, குழந்தைகள் டிவியை கிட்ட இருந்து பார்ப்பது என்று இருக்கிறார்கள். ஒரு வேளை இரவில் ரொம்ப நேரம் போன் பார்க்க வேண்டும் என்றால், வீட்டில் விளக்குகளை அனைத்து விட்டு பார்க்காமல், விளக்குகளை எரியவிட்டு போனைப் பயன்படுத்துங்கள், அப்போது போன் லைட் கண்களை பெரியதாகப் பாதிக்காது.
Advertisment
Advertisements
விளக்குகளை அனைத்து விட்டு போன் பயன்படுத்தினால், இருட்டில் போன் வெளிச்சம் கண்களைப் பாதிக்கும். கண்களைச் சுற்றி இருக்கும் நரம்புகள் பாதிக்கப்பட்டு கருவளையம் போகாது அப்படியே இருக்கும்.
அதனால், கருவளையம் போக வேண்டும் என்றால், இரவு தூங்கும்போது கண்ணைச் சுற்றி சோற்றுக் கற்றாழை ஜெல் போட்டுக்கொண்டு படுத்து தூங்குங்கள். இது ரொம்ப நல்லது.
அதே போல, வாரத்துக்கு 2 - 3 முறை வெள்ளரி துண்டுகளை கண்களின் மீது வைத்துக்கொண்டு 30 நிமிடங்கள் கழித்து எடுத்துவிட்டு முகத்தைக் கழுவினால், கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.” என்று கூறினார்.