/indian-express-tamil/media/media_files/2024/11/16/R8ZOxI7LQr1WZkfz3vxR.jpg)
வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். பல்வேறு சூழல்களில் மனிதர்களுக்கு வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்கான தீர்வை மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
உடலுக்கு சீராக இல்லாத உணவுகள் சாப்பிடும் போது பலருக்கும் வாந்தி ஏற்படும். அஜீரண கோளாறு காரணமாகவும் வாந்தி, குமட்டல் போன்றவை உருவாகும். சிலருக்கு பயணம் செய்யும் போது வாந்தி வரும். மோஷன் சிக்னெஸ் காரணமாக இவ்வாறு வாந்தி வருவதாக கூறப்படுகிறது.
இதே போன்று கர்ப்பிணி பெண்களுக்கும் அதிகளவில் வாந்தி வரும் உணர்வு இருக்கும். குறிப்பாக ஆரம்ப கால கர்ப்ப நாள்களில் இந்த உணர்வு அடிக்கடி ஏற்படும். இது போன்ற பிரச்சனைகளுக்கு, இஞ்சி நல்ல மருந்தாக இருக்குமென மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளுக்கு இஞ்சி பக்க விளைவுகளின்றி மருந்தாக செயல்படுகிறது என நியூயார்க் அகாடெமி ஆஃப் சயின்ஸ் ஆய்வறிக்கை கூறுவதாக சிவராமன் தெரிவித்துள்ளார். இஞ்சியை துவையலாகவோ அல்லது சாறு எடுத்தோ பயன்படுத்தலாம் என மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.