உடல் சூடு, பித்தம் குறைய சிம்பிள் டிரிக்... அவசியமானதும் கூட; டாக்டர் சிவராமன்

உடல் சூடு, பித்தம் குறைய சிம்பிள் டிரிக் ஒன்றை டாக்டர் சிவராமன் வழங்கியுள்ளார். மேலும், உடல் சூடு, பித்தம் குறைப்பது அவசியமானது என்று கூறும் டாக்டர் சிவராமன், அதற்கான எளிய வழிமுறைகளையும் கூறியுள்ளார்.

உடல் சூடு, பித்தம் குறைய சிம்பிள் டிரிக் ஒன்றை டாக்டர் சிவராமன் வழங்கியுள்ளார். மேலும், உடல் சூடு, பித்தம் குறைப்பது அவசியமானது என்று கூறும் டாக்டர் சிவராமன், அதற்கான எளிய வழிமுறைகளையும் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
dr sivaraman

உடல் சூடு, பித்தம் குறைப்பதற்கான எளிய வழிமுறைகளை டாக்டர் சிவராமன் ஹெல்த் தமிழ்நாடு என்ற யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.

உடல் சூடு, பித்தம் குறைய சிம்பிள் டிரிக் ஒன்றை டாக்டர் சிவராமன் வழங்கியுள்ளார். மேலும், உடல் சூடு, பித்தம் குறைப்பது அவசியமானது என்று கூறும் டாக்டர் சிவராமன், அதற்கான எளிய வழிமுறைகளையும் கூறியுள்ளார்.

Advertisment

உடல் சூடு, பித்தம் குறைப்பதற்கான எளிய வழிமுறைகளை டாக்டர் சிவராமன் ஹெல்த் தமிழ்நாடு என்ற யூடியூப் சேனலில் கூறியுள்ளார். 

டாக்டர் சிவராமன் கூறுகையில், “உடல் சூட்டை தணிக்க வேண்டும் என்றால் முதல் விஷயம் நம்ம வாழ்வியலில் மாற்றங்கள் செய்ய வேண்டும். தலைக்கு குளிக்க வேண்டும். நிறைய பேர் தலைக்கு குளியல் என்பது வாரத்துக்கு 2 முறை குளிப்பது என்று நினைத்திருக்கிறார்கள். முன்னாடி எல்லாம் பெண்களுக்கு தலையில் கூந்தல் இருக்கும், அதனால அதை காய வைக்க முடியாது. அதனால், வாரத்துக்கு 2 நாள் தான் தலைக்கு குளிக்க முடியும் என்று சொன்னார்கள். இன்றைக்கு பல வாரத்துக்கு 2-3 நாள்தான் தலைக்கு குளிப்பதாகக் கூறுகிறார்கள். இதைத்தான் ஏர் வாஷ் அப்படின்னு சொல்கிறார்கள். இது ரொம்ப தவறான ஒரு விஷயம். தலைக்கு குளித்தல் என்பது மிக மிக முக்கியமான விஷயம். குளித்தல் என்றாலே அது தலைக்கு குளிக்கிறதுதான். தலைக்கு குளிக்காமல் குளிப்பது என்பது உடலை கழுவி விடுறோம் அப்படின்னு நினைக்கிறேன். உடலில் அழுக்கை கழுவுறதுதான் குளிக்கிறது என்று ஒரு தப்பான புரிதல் நிறைய இருக்கிறது. குளித்தலுக்கும் உடலை வெறும் கழுவி விடறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. 

Advertisment
Advertisements

உடலை கழுவி விட வேண்டும் என்றால் எல்லாரும் சாயந்திரம் எல்லா வேலையும் முடித்துவிட்டு மாலையில் உடலைக் கழுவிவிடலாம். ஆனால், அது கிடையாது. இரவெல்லாம் நம்ம உடலில் பித்தம் கூடியிருக்கும். இரவில் சந்திரனுடைய ஆட்சியில் உடலில்  இரவில் பித்தம் கூடும். காலையில் சூரியன் வந்து பிரபஞ்சத்தை ஆள ஆரம்பிக்கும் போது தானாகவே உடல் குளிர்ச்சி அடைய வேண்டும். இரவு கூடிய பித்தத்தை காலையில் தணிப்பதற்காக தான் எல்லாரும் காலையில் குளிக்கிறோம். தலையில் தான் பித்தம் தங்கி இருக்கும் அந்த பித்தத்தை தணிக்கிறதுக்காக தான் காலையில் தலைக்கு குளிக்க வேண்டும். பித்த வெடிப்பு வராம இருக்க வேண்டும் என்றால் எல்லாரும் தலைக்கு குளிக்கிற பழக்கத்தை கொண்டு வர வேண்டும். தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளிக்க வேண்டும். நல்லெண்ணெயை வைத்து தலையில் மசாஜ் பண்ணிட்டு ஒரு 15-20 நிமிஷம் கழிச்சு குளிக்கலாம்.

உடம்பெல்லாம் எண்ணெய் பூசி குளித்தல் என்பது எண்ணெய் குளியல் நம்மளுடைய பாரம்பரியமான ஒரு மிகப்பெரிய நலப் பழக்கம். அந்த பழக்கம் ஒழிந்து போனது. ஒரு காலத்துல என்ன சொன்னார்கள். உடல் மேல் தேக்கிற எண்ணெயால் என்ன பெரியதாக மாற்ற போகுது. அது எப்படி உடம்புக்குள் மாற்றம் கொண்டு வரும் என்று கேள்வி கேட்ட காலம் உண்டு. நவீன அறிவியல் அதை ஏற்றுக்கொள்ளவே இல்லை. ஆனால், இன்றைக்கு அறிவியல் என்ன சொல்கிறது என்றால், உடம்பில் எண்ணெய் தேய்த்து தலைக்கு எண்ணெய் வைத்து தேய்த்து குளிக்கிறபோது உடலில் பல சுரப்புகள் கூடுகிறது என்று கூறுகிறது. 

அறிவியல் பூர்வமாக சாதாரணமா எண்ணெய் தேய்த்து குளித்தாலே ஒரு தூக்கம் வருகிறது இல்லையா, ஒரு நல்ல சோர்வுல இருந்த உடம்பு, சோர்வு நீங்கி உடம்பெல்லாம் இலகுவான மாதிரி ஒரு உணர்வை உணர்றோம். அதனால், நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கிற பழக்கத்தை கண்டிப்பாக நம்ம சின்ன வயது முதல் இருக்க வேண்டும். 

பெரியவர்கள் எண்ணெய் பொருட்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால், சிறியவர்களுக்கு எண்ணெய் பொருட்கள், கொழுப்பு பொருட்கள் அளவாகக் கொடுக்க வேண்டும்.” என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: