கருவில் இருக்கும் குழந்தைக்கு எப்போது காது கேட்கும்? விளக்கும் டாக்டர். சுகன்யா அனந்தராமன்
கருவில் இருக்கும் குழந்தைக்கு எப்போது காது கேட்கத் தொடங்கும் அதற்கு கருவில் உள்ள சிசு பதிலளிக்குமா என்பது குறித்து டாக்டர் சுகன்யா அனந்தராமன் விளக்கமாகக் கூறியுள்ளார்.
கருவில் இருக்கும் குழந்தைக்கு எப்போது காது கேட்கத் தொடங்கும் அதற்கு கருவில் உள்ள சிசு பதிலளிக்குமா என்பது குறித்து டாக்டர் சுகன்யா அனந்தராமன் விளக்கமாகக் கூறியுள்ளார்.
டாக்டர் சுகன்யா அனந்தராமன் தனது யூடியூப் சேனலில் (@DrSuganyaAnandaraman) கருவில் இருக்கும் குழந்தைக்கு எப்போது காது கேட்கத் தொடங்கும் என்பது குறித்து பேசியுள்ளார்.
தாயின் கருவில் இருக்கும் குழந்தைக்கு எப்போது காது கேட்கத் தொடங்கும் அதற்கு கருவில் உள்ள சிசு பதிலளிக்குமா என்பது குறித்து டாக்டர் சுகன்யா அனந்தராமன் விளக்கமாகக் கூறியுள்ளார்.
Advertisment
டாக்டர் சுகன்யா அனந்தராமன் தனது யூடியூப் சேனலில் (@DrSuganyaAnandaraman) கருவில் இருக்கும் குழந்தைக்கு எப்போது காது கேட்கத் தொடங்கும் என்பது குறித்து பேசியுள்ளார்.
டாக்டர் சுகன்யா அனந்தராமன் கூறுகையில், கருவில் இருக்கும் குழந்தைக்கு எப்போது காது கேட்கத் தொடங்கும், நாம் பேசுவதை கருவில் உள்ள சிசுவால் கேட்க முடியுமா, அதற்கு கருவில் உள்ள சிசு பதிலளிக்குமா என்பது குறித்து பார்க்கலாம். என்னிடம் ஒரு கர்ப்பிணி பெண் வந்தார். அவர் நான் பேசுவது வயிற்றில் உள்ள என் குழந்தைக்கு எப்போது கேட்கும், அதற்கு குழந்தை எப்போது ரெஸ்பான்ஸ் பண்ணுமா என்று கேட்டிருந்தார்.
Advertisment
Advertisements
அதனால், குழந்தைக்கு எப்போது காது கேட்கும் என்பதை இந்த வீடியோ மூலம் கூறுகிறேன். கருவில் உள்ள குழந்தைக்கு எப்போது காது வளரும் என்றால், கர்ப்பமான பிறகு, 9 வாரத்தில் சிசுவின் தலையில் காது ஒரு புள்ளி மாதிரி உருவாகி வளரத் தொடங்கும். பின்னர், 18 வாரம் கருவில், அதாவது 4 மாதம் முடிந்து 5 மாதம் கர்ப்பமாக இருக்கும்போது சிசுவின் காது வளர்ச்சி முழுமையாக நிறைவடைந்துவிடும். காது வளர்ச்சி நிறைவடைந்த பிறகு, சிசுவின் காது உள்பகுதி மூளையுடன் நரம்புகள் மூலமாக நன்றாக இணைந்திருக்கும். அதனால், நாம் பேசுவதை குழந்தையால் கேட்க முடியும். மெலும், 20 வாரம் 22 வாரம் கர்ப்பமாக இருக்கும்போது குழந்தையால் நீங்கள் பேசுகிற சின்ன சின்ன ஒலியைக் கேட்க முடியும். குழந்தையின் முழுமையான கேட்கும் திறன் எப்போது அதிகரிக்கும் என்றால், 22 வாரம் முதல் 30 வாரம் வரை 7-8 மாதத்தில் முழுமையாகக் கேட்க முடியும். அதனால்தான், இந்த மாதத்தில் வலைகாப்பு செய்கிறார்கள். இந்த மாதத்தில் வளையல் சத்தம் கேட்டு குழந்தை நன்றாகத் தூங்கும்.
இந்த கட்டத்தில் கருவில் இருக்கும் குழந்தை நாம் பேசுவதைக் கேட்குமா என்றால் பெரும்பாலும் குழந்தை ஓய்வில் இருக்கும். முழித்துக்கொண்டிருக்கும்போது நாம் பேசுவது குழந்தைக்கு கேட்கும். அதனால், எல்லா நேரமும் பேசிக்கொண்டே இருக்கக்கூடாது. குழந்தை ஓய்வெடுக்க போதுமான நேரம் கொடுக்க வேண்டும். இனிமையான இசை கேட்டால் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். புத்தகம் படிக்கலாம். அதே போல, குழந்தையின் அப்பா பேசுவதையும் குழந்தைகளால் உணர முடியும். நீங்கள் இரண்டாவது கர்ப்பமாக இருந்தால் முதல் குழந்தை என்ன பேசினாலும், கருவில் உள்ள குழந்தையால் உணர முடியும். அதனால், பாசிட்டிவ் சிந்தனையுடன் மகிழ்ச்சியாக இருங்கள்.” என்று டாக்டர் சுகன்யா அனந்தராமன் கூறுகிறார்.