பாம்பு கடித்தால் கீறி விடக்கூடாது... முதலில் இதைத் தான் செய்ய வேண்டும்; டாக்டர் வேணி
ஒருவரை பாம்பு கடித்தால் என்ன மாதிரியான முதலுதவி செய்ய வேண்டும், என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து டாக்டர் வேணி கூறுகிறார்.
ஒருவரை பாம்பு கடித்தால் என்ன மாதிரியான முதலுதவி செய்ய வேண்டும், என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து டாக்டர் வேணி கூறுகிறார்.
பாம்பு கடித்தால் அந்த இடத்தில் வாயில் கடித்து உறிஞ்சுவது, கீறி விடுவது கூடாது என்று எச்சரிக்கும் டாக்டர் வேணி பாம்பு கடித்தால் முதலில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நியூரோ டாக்டர் தமிழ் (Nuro Doctor Tamil) என்ற யூடியூப் சேனலில் ஆலோசனைகளைக் கூறியுள்ளார்.
ஒருவரை பாம்பு கடித்தால் என்ன மாதிரியான முதலுதவி செய்ய வேண்டும், என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து டாக்டர் வேணி கூறுகிறார்.
Advertisment
பாம்பு கடித்தால் அந்த இடத்தில் வாயில் கடித்து உறிஞ்சுவது, கீறி விடுவது கூடாது என்று எச்சரிக்கும் டாக்டர் வேணி பாம்பு கடித்தால் முதலில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நியூரோ டாக்டர் தமிழ் (Nuro Doctor Tamil) என்ற யூடியூப் சேனலில் ஆலோசனைகளைக் கூறியுள்ளார்.
டாக்டர் வேணி கூறுகையில், எல்லா பாம்புகளும் விஷமுள்ள பாம்புகள் கிடையாது. அதே போல, எல்லா பாம்பு கடிகளும் விஷப் பாம்புக் கடிகள் கிடையாது. விஷப் பாம்பு கடித்தது என்றால், அந்த இடத்தில் வாயில் கடித்து உறிஞ்சுவது, கீறி விடுவது கூடாது. அதே போல, பாம்பு கடித்த இடத்தில் இறுக்கமாகக் கட்டவும் கூடாது என்று கூறுகிறார்.
Advertisment
Advertisements
ஒருவருக்கு பாம்பு கடித்தது என்றால் கடித்த இடத்தில் சோப்பு போட்டு கழுவுங்கள். காலில் கடித்தது என்றால் நடக்கக்கூடாது. பாம்பு கடித்தால் பயப்படக் கூடாது, கூட்டம் கூடி, பாம்பைத் தேடி அடிப்பது என்று நேரத்தை வீணாக்காமல் உடனடியா மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
மருத்துவர்கள், பாம்பு கடித்த இடத்தில் மட்டும் வீக்கம் இருத்தல், வீக்கம் பரவுதல், வீக்கம் அதிகரித்தல் ஆகியவற்றை வைத்து அதன் நிலைகளைக் கணிக்கின்றனர்.
மேலும், பாம்பு கடிக்கு ஆளான நபருக்கு ரத்தப் பரிசோதனை செய்து, அதற்கு பிறகு, பாம்புக்கடி நச்சு முறிவு தருகின்றனர். பிறகு அவர்களுக்கு வலி இருந்தால் தேவையான மருந்துகள் கொடுக்கப்படும். நீங்களாகவே எந்த வலி நிவாரணி மருந்துகளும் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று டாக்டர் வேணி கூறுகிறார்.