காஞ்சிபுரம் காமாச்சியம்மன் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்: கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை

ஆடி பெளர்ணமியையொட்டி காஞ்சிபுரம் காமாச்சியம்மன் கோயிலில் தமிழ்நாடு முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று சாமி தரிசனம் செய்தார்.

ஆடி பெளர்ணமியையொட்டி காஞ்சிபுரம் காமாச்சியம்மன் கோயிலில் தமிழ்நாடு முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று சாமி தரிசனம் செய்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
துர்கா ஸ்டாலின்

துர்கா ஸ்டாலின்

ஆடி பெளர்ணமியையொட்டி காஞ்சிபுரம் காமாச்சியம்மன் கோயிலில் தமிழ்நாடு முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று சாமி தரிசனம் செய்தார்.

Advertisment

சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சியம்பாள் திருக்கோயிலில் ஆடி மாதத்தையோட்டி நாள்தோறும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று மாலை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு அம்பாளை சிறப்பு தரிசனம் செய்தார். முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் திருக்கோயிலின் சிறப்புகள்  குறித்து எடுத்துரைக்கப்பட்ட நிலையில், அவர் சாமி தரிசனத்துக்கு பின்பு கோவயிலை சுற்றி வந்தார். இந்நிலையில் சிறப்பு அர்ச்சனைக்கு தேவையான பொருட்களை வழங்கி, அவர் சாமி தரிசனம் செய்தார்.

சிறப்பு அர்ச்சனைகள் செய்த பின் தீபாராதனையில்  கலந்து கொண்ட துர்கா ஸ்டாலினுக்கு  கோவில் நிர்வாகம் சார்பில் மலர் மாலை அணிவிக்கப்பட்டு  மஞ்சள் பட்டுப் புடவை, வளையல் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டன.  

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: