/indian-express-tamil/media/media_files/2025/02/01/0rNrm3xqzX2KSFQHAkS7.jpg)
வயது பேதமின்றி தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு முடி உதிர்வு பிரச்சனை காணப்படுகிறது. இதற்கு தீர்வு காண்பதற்கு ஏராளமாக பணம் செலவு செய்து நிறைய ஷாம்பூக்கள், சீரம், ஹேர் ஆயில் வாங்குபவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.
ஆனால், இவற்றில் இருந்து முடி உதிர்வுக்கு தீர்வு கிடைக்கிறதா என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. முடி உதிர்வு பிரச்சனையை போக்க புரதம் நிறைந்த சத்தான உணவுகளை சாப்பிடுவது மிக முக்கியம்.
அதேவேளையில், வாரத்திற்கு இரண்டு முறையாவது ஹேர்பேக் பயன்படுத்தி குளிப்பதும் முக்கியம் தான். அந்த வகையில் அதிக மெனக்கெடல் இல்லாமல் எளிதாக பின்பற்றக் கூடிய ஈசி ஹேர்பேக் குறித்து தற்போது பார்க்கலாம். இதற்கு இரண்டு பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்.
ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தனியாக எடுத்து, அத்துடன் சிறிதளவு ஆலிவ் ஆயில் சேர்க்க வேண்டும். இந்த இரண்டையும் நன்றாக கலந்து, நம் தலைமுடியில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அதன்பின்னர், சுமார் 30 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம்.
இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினால், முடி உதிர்வு பிரச்சனை நீங்கி அடர்த்தியாக முடி வளரும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.