/indian-express-tamil/media/media_files/2025/06/03/gf73KSMJMA1YVBgmBD9A.jpg)
உங்கள் வீட்டில் கரண்ட் இல்லையா, 2 கைப்பிடி உப்பை வைத்து எப்படி அயர்ன் பண்ணுவது என்று நளினி மாணிக் குக்கிங் (@nalinimanickcooking) என்ற யூடியூப் சேனலில் ஒரு சூப்பரான டிப்ஸ் கொடுத்திருக்கிறார்கள்.
காலையில் நீங்கள் அலுவலகத்துக்கு செல்லும்போது, உங்கள் ஆடையை அயர்ன் செய்ய கரண்ட் இல்லையா, அல்லது அயர்ன் பாக்ஸ் வேலை செய்யவில்லையா கவலையே படாதீர்கள், 2 கைப்பிடி உப்பு போதும், ஈஸியா அயர்ன் பண்ணலாம், சூப்பர் டிப்ஸ் இது.
பெரும்பாலானவர்கள் தினமும் தங்கள் உடைகளை அயர்ன் செய்து போடுவது வழக்கமாக வைத்துள்ளனர். ஆடையே ஒரு மனிதனைப் பற்றிய சித்திரத்தை ஏற்படுத்துகிறது. அதனால், ஆடையில் கவனமாக உள்ளனர்.
நீங்கள் அயர்ன் பண்ண வேண்டும் என்று நினைக்கும்போது, உங்கள் வீட்டில் கரண்ட் இல்லையா, 2 கைப்பிடி உப்பை வைத்து எப்படி அயர்ன் பண்ணுவது என்று நளினி மாணிக் குக்கிங் (@nalinimanickcooking) என்ற யூடியூப் சேனலில் ஒரு சூப்பரான டிப்ஸ் கொடுத்திருக்கிறார்கள்.
உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள். ஏனென்றால், எல்லா உணவுகளுக்கும் சுவையூட்டுவது உப்புதான். உப்பு சுவைக்கு மட்டுமல்ல, உப்பை வைத்து துணி அயர்னிங்கூட பண்ணலாம்.
நீங்கள் துணியை அயர்ன் பண்ண நினைக்கும்போது, உங்கள் வீட்டில் கரண்ட் இல்லை என்றால் கவலைப்பட வேண்டாம். முதலில் அடி கனமான கைப்பிடி உள்ள ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 2 கைப்பிடி அளவுக்கு கல் உப்பு போட்டுக்கொள்ளுங்கள்.
அடுப்பில் வைத்து நல்லா சூடு பண்ணுங்கள். உப்பு நல்லா சூடாக இருக்கும்போது அடுப்பை ஆஃப் பண்ணி விடுங்கள். இப்போது நீங்கள் அயர்ன் பண்ண வேண்டிய துணி மீது பத்திரமாக அயர்ன் பண்ணுங்கள். கரண்ட் இல்லாவிட்டாலும் ஈஸியா அயர்ன் பண்ணலாம், சூப்பர் டிப்ஸ் இது. இதை உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.