/indian-express-tamil/media/media_files/2024/12/30/aoudalC2Tsxf86tkeFrn.jpg)
வீட்டை சுத்தப்படுத்துவதில் மிக முக்கிய வேலையாக இருப்பது பாத்ரூம் தான். பாத்ரூம் எந்த அளவிற்கு சுத்தமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு நமது உடல் நலமும் பாதுகாப்பாக இருக்கும். அதனடிப்படையில் பாத்ரூமை எப்படி சுத்தமாக வைத்திருப்பது என இப்பதிவில் பார்க்கலாம்.
பாத்ரூம் டைல்ஸ் மற்றும் சுவர்களில் அதிகப்படியாக படிந்து காணப்படும் உப்புக் கறையை எளிமையாக அகற்றும் வழிமுறை உள்ளது. இதனை பின்பற்றுவதால் அவற்றை சுலபமாக அகற்றி விட முடியும்.
ஒரு சிறிய பாத்திரத்தில் மூன்று டேபிள் ஸ்பூன் கல் உப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் பாதி எலுமிச்சை பழத்தின் சாறு, துணி துவைக்க பயன்படும் சோப்பு பொடி, இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடா, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இவற்றை கலந்த பின்னர் பார்ப்பதற்கு கிரீம் போன்று தோற்றமளிக்கும். இதையடுத்து கைகளில் க்ளவுஸ் அணிந்து, மிருதுவான ஸ்க்ரப்பர் எடுத்து, ஏற்கனவே தயாரித்து வைத்த கலவை கொண்டு பாத்ரூமை சுத்தம் செய்யலாம்.
இவ்வாறு சுத்தப்படுத்துவதன் மூலம் உப்புக் கறைகளை எளிமையாக அகற்ற முடியும். நம் கைகளிலும் வலி ஏற்படாது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.