/indian-express-tamil/media/media_files/2025/03/29/kFjgqHxC0vqDAxGPuwWn.jpg)
கோடை வெயிலின் தாக்கம் தற்போது பல்வேறு பகுதிகளில் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. பல ஊர்களில் இப்போதே 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகிறது. இந்த நேரத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளும் வகையில் நம் உணவு முறை இருக்க வேண்டியது அவசியம்.
இதற்காக தண்ணீர் நிறைய குடித்து, நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் சருமத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது மிக முக்கியம். வெயிலின் தாக்கம் முதலில் நம் சருமத்தை தான் அதிகமாக பாதிக்கும்.
குறிப்பாக, அடிக்கடி வெளியே செல்பவர்களின் சருமம் சட்டென கருமையாக மாறி விடும். இதனை போக்குவதற்காக சிலர் பியூட்டி பார்லருக்கு செல்வார்கள். இது தவிர விலை உயர்ந்த ஃபேஸ் கிரீம், சீரம் போன்ற பொருட்களையும் சிலர் வாங்கி பயன்படுத்துவார்கள்.
ஆனால், இது போன்ற பொருட்களில் இரசாயனங்கள் அதிகமாக இருப்பதால் அதன் மூலம் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுமோ என்ற தயக்கம் பலருக்கு இருக்கும். அந்த வகையில் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சுலபமாக ஃபேஷியல் செய்து கொள்ளலாம்.
அந்த வகையில் அரிசி பொடி, மஞ்சள் பொடி மற்றும் சிறிதளவு தேனை நம் முகத்திற்கு தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை நன்றாக பசை பதத்திற்கு கலக்கினால் ஃபேஸ்பேக் தயாராகி விடும். இதனை நம் முகத்தில் தடவி விட்டு சுமார் 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம்.
இவ்வாறு செய்தால் நம் முகம் பார்ப்பதற்கு பொலிவாக மாறி விடும். இதனை தொடர்ந்து செய்யும் போது கூடுதல் பலன் அளிக்கும். இதனால் வெயிலின் மூலம் ஏற்பட்ட கருமையும் நீங்கி, சருமம் பழைய நிலைக்கு திரும்பி விடும்.
நன்றி - DAISY HOSPITAL Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.