வீடுகளில் பூரி செய்யும் போது கடைகளில் இருப்பதை போன்று உப்பலாக இல்லை என சிலர் நினைப்பார்கள். மேலும், கடைகளில் கிடைக்கும் சப்பாத்தி அளவிற்கு மிருதுவாக இல்லாததை போன்றும் தோன்றும்.
அந்த வகையில் கடைகளில் இருப்பதை போன்று பூரி, சப்பாத்தி செய்ய பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை காணலாம். முதலில், கோதுமை மாவு, உப்பு, எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதனுடன் ஒரு பிரட் துண்டை எடுத்து சிறிய துண்டுகளாக சேர்க்க வேண்டும்.
இதைத் தொடர்ந்து, சற்று வெதுவெதுப்பான தண்ணீரை இந்த மாவுடன் சேர்த்து பிசைய வேண்டும். பிரட் துண்டு மற்றும் வெதுவெதுப்பான நீர் சேர்த்திருப்பதால் மாவு மிருதுவாக இருக்கும். சுலபமாக பிசைந்து விடலாம்.
இறுதியாக இந்த மாவை சுமார் 10 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் பூரி அல்லது சப்பாத்தி செய்யலாம். அதன்படி, நீங்கள் பூரி செய்யும் போது உப்பலாகவும், சப்பாத்தி செய்யும் போது மிருதுவாகவும் வரும். இந்த எளிமையான டிப்ஸை உங்கள் வீட்டில் முயற்சித்து பார்க்கலாம்.