இட்லி பாத்திரத்தில் இப்படி மூடி வச்சு... தேங்காய் இனி இப்படி துருவுங்க: ஒரு வாரம் யூஸ் பண்ணலாம்!

தேங்காய் துருவுவதற்கும், துருவிய தேங்காயை ஒரு வாரத்திற்கு பயன்படுத்துவதற்கும் எளிமையான முறை குறித்து இப்பதிவில் பார்க்கலாம். இதன் மூலம் தேங்காயை சுலபமாக துருவ முடியும்.

தேங்காய் துருவுவதற்கும், துருவிய தேங்காயை ஒரு வாரத்திற்கு பயன்படுத்துவதற்கும் எளிமையான முறை குறித்து இப்பதிவில் பார்க்கலாம். இதன் மூலம் தேங்காயை சுலபமாக துருவ முடியும்.

author-image
WebDesk
New Update
Coconut hack

மாறி வரும் கால சூழலில் அனைத்து காரியங்களையும் எளிதாகவும், விரைவாகவும் முடிப்பதற்கு பல்வேறு வழிகளை நாம் தேடுகிறோம். இதற்கு சமையலும் விதிவிலக்கல்ல. அவ்வாறு சமையலில் அதிகளவில் பயன்படும் தேங்காயை எளிதாக துருவும் முறையை தற்போது காணலாம்

Advertisment

முதலில் தேங்காயை சுமார் 30 விநாடிகள் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இல்லையெனில், பைப்பை திறந்து விட்டு தேங்காயை முழுவதுமாக கழுவ வேண்டும்.

அதன் பின்னர், தேங்காயை இரண்டாக உடைக்க வேண்டும். தேங்காய் கண் இருக்கும் அருகேயுள்ள கோட்டின் மீது அடித்தால் தேங்காயை உடைக்க எளிமையாக இருக்கும்.

இதையடுத்து, உடைத்த தேங்காயை இட்லி பாத்திரத்தில் வைத்து சுமார் 10 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். இவ்வாறு வேக வைத்த தேங்காயை மெல்லிய கத்தி கொண்டு பிரித்தால், ஓட்டில் இருந்து தேங்காய் தனியாக வந்து விடும். மேலும், தேங்காய் மீது ஒட்டியிருக்கும் சிறிய ஓடுகளையும் ஈசியாக சீவி விடலாம்.

Advertisment
Advertisements

இதன் பின்னர், பிரித்து எடுத்த தேங்காயை சிறிய துண்டுகளாக வெட்டி தண்ணீர் சேர்க்காமல் மெதுவாக மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும். அரைத்து எடுத்த தேங்காயை தனியாக பாத்திரத்தில் போட்டு கைகள் படாமல் ஸ்பூனில் எடுத்து பயன்படுத்தினால், சுமார் 1 வாரத்திற்கு தேங்காய் கெட்டுப் போகாமல் இருக்கும். 

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ayurvedic qualities of coconut

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: