/indian-express-tamil/media/media_files/2025/09/15/download-20-2025-09-15-09-58-44.jpg)
இன்றைய காலத்தில் வாஷிங் மிஷின் இல்லாத வீடு எடுப்பது கடினம். இப்போது கிராமப்புறங்களிலும் கூட அதன் பயன்பாடு அதிகமாகிவிட்டது. வீட்டில் தினசரி வேலைகளில் வாஷிங் மிஷின் முக்கிய பங்காற்றுகிறது. அதனால் வாரத்திற்கு 3–4 முறை பயன்படுத்துவதும் சாதாரணம்தான். ஆனால் இந்த மாதிரியான அடிக்கடி பயன்படும் சாதனங்கள் சில நேரங்களில் சிக்கல்களை ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு. குறிப்பாக, வாஷிங் மிஷினை சரியாக சுத்தம் செய்யாமல் விட்டாலோ, பயன்படுத்தும் தண்ணீர் தூய்மையில்லாததாயிருந்தாலோ, அதில் துர்நாற்றம் உருவாகலாம். அந்த வாசனை நம் ஆடைகளிலும் ஒட்டும்; அதன் விளைவாக நம்மிடம் இருந்து அந்த வாடை வெளியேறினால் அது சங்கடத்தை ஏற்படுத்தும்.
அதனால், வாஷிங் மிஷின் துர்நாற்றத்தை முற்றிலும் நீக்குவது நல்லது. அதற்காக அதிக செலவு செய்ய வேண்டியதில்லை. நாங்கள் கூறும் எளிய டிப்ஸ்களை பின்பற்றினால், சுலபமாகவே பிரச்சனையை தீர்த்துவிடலாம்.
இதற்கு தேவையான பொருட்கள்:
படிகாரம் - 1 துண்டு
எலுமிச்சை தோல் - 4
தண்ணீர்- 2 லிட்டர்
இந்த மூன்று பொருட்களை குறிப்பிட்டுள்ள அளவில் சரியாக எடுத்துக்கொள்ளுங்கள்.
எலுமிச்சையை பிழிந்தவுடன் அதை தேவையற்றதாக நினைத்து வெறுமனே தூக்கி எறிந்து விடக்கூடாது. அதன் ஈரப்பதத்தை உலர்த்தி, சிறந்த முறையில் பாதுகாத்து வைத்தால், பல பயனுள்ள ஹேக்குகளுக்கு அதை பயன்படுத்த முடியும். 2 லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க விடுங்கள். கொதித்ததும் அதில் படிகாரத்தை தூளாக்கி சேருங்கள். பின் அதில் எலுமிச்சை தோலையும் சேருங்கள்.
இந்த கலவையை 15 நிமிடங்கள் வரை கொதிக்கவிடுங்கள். தண்ணீரில் நறுமணம் வீசத் தொடங்கும். பின்னர் அடுப்பை அணைத்து, அதை மூடி வைத்து இன்னும் 15 நிமிடங்கள் அவ்வாறே வைக்கவும்.
அதற்குப் பிறகு, இந்த கரைசலை வாஷிங் மிஷினில் டிடர்ஜெண்ட் சேர்க்கும் பகுதியில் ஊற்றுங்கள். மீதமுள்ள கரைசலை டிரம்முக்குள் ஊற்றவும். இந்த செயல்பாட்டின் போது டிரம் முழுவதும் காலியாக இருக்க வேண்டும்; எந்த துணியும் உள்ளே இருக்கக்கூடாது.
அடுத்து, வாஷிங் மிஷினை 15 முதல் 20 நிமிடங்கள் வரை இயக்கவும். இதனால் கரைசல் தண்ணீர் டிரம்மில் சுழன்று உள்ளே இருக்கும் அழுக்குகளை அகற்றும். தண்ணீர் முழுவதும் வெளியேறிய பிறகு, மீண்டும் சுத்தமான தண்ணீரில் 15 நிமிடங்கள் மிஷினை இயக்குங்கள். இயக்கம் முடிந்ததும் மிஷினை அணைத்து, அதன் கதவைத் திறந்து காற்றோட்டமாக வைத்திருக்கவும். தண்ணீர் முழுவதும் காய்ந்த பிறகு பாருங்கள் — துர்நாற்றம் இருந்ததை உணரவே முடியாமல் போயிருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.