/indian-express-tamil/media/media_files/XCbJjPe3rf52nvnYcAJM.jpg)
பச்சையாக சாப்பிடுவது நிறுத்துங்க
கீரை மற்றும் கேல் ஆகிய இரண்டையும் பச்சையாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என்று கூறப்படுகிறது. வாய்வுத் தொல்லை, குமட்டல் சமந்தமான நோய்கள் இருப்பவர்கள் இந்த இரண்டையும் பச்சையாக சாப்பிடுவதை நிறுத்திகொள்ளவும்.
கீரை மற்றும் கேலில் உள்ள ஆக்ஸாலிக் ஆசிட், கால்சியம் மற்றும் உணவில் உள்ள சத்துகளுடன் சேர்ந்து கரைய இயலாத கிரிஸ்டல்களாக மாறும். இந்த ஆக்ஸாலிக் ஆசிட் சமைக்கப்படாத போது, உடையாமல் அப்படியே இருந்து, கால்சியம், இரும்புச் சத்து மற்றும் இன்னும் தேவையான சத்துகளை உடல் உள்வாங்கிக்கொள்வதை தடுக்கும். இதனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.
கால் வலி குறிப்பாக மூட்டுகளில், வலி மற்றும் வீக்கத்தால் அவதிப்படுபவர்கள் அதிக அளவில் கீரையைச் சேர்த்துக்கொள்ள கூடாது. மேலும் பச்சையாக இதை சாப்பிட்டால் அதில் உள்ள பாக்டீரியா சாகாமல் இருக்கும். மேலும் கீரை மற்றும் கேல் இலைகளை நாம் அவித்து சாப்பிடுவது நல்லது.
கீரை மற்றும் கேலை சமைப்பதால், அதில் உள்ள ஆக்ஸாலிக் ஆசிட் உடைந்து, கீரையில் உள்ள சத்தை உடல் எடுத்துக்கொள்ள உதவும். அதிக அளவில் வாய்வுத் தொல்லை, அஜீரண பிச்சனையில் அவதிப்படுபவர்கள், கீரை மற்றும் கேலை பச்சையாக சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படலாம். மேலும் குடல் பிரச்சனைகள் இருப்பவர்கள், பச்சையாக சாப்பிட்டால், கடும் வயிற்று வலி ஏற்படலாம். குமட்டல், வயிற்று உப்புதல் ஏற்படலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.