நமது சிறுநீரகத்தை, நாம் ஆரோக்கியமாக வைத்துகொள்வது மிகவும் அவசியாமான ஒன்று . இந்நிலையில் நாம் இதை ஆரோக்கியமாக பார்த்துகொள்ள, என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.
இந்நிலையில் சிறுநீரக பிரச்சனைகள் இருக்கும் நபர்கள், குறைந்த சோடியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம் உள்ள உணவை எடுத்துகொள்ள வேண்டும். அதிக தரமான புரத சத்து கொண்ட உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், லீன் புரத சத்து ஆகியவற்றை எடுத்துகொள்ள வேண்டும்.
தேவையான அளவு தண்ணீரை எடுத்துகொள்ள வேண்டும். இந்நிலையில் உடலில் நஞ்சுகளை வெளியேற்றி, சுறிநீரக கல் உருவாகாமல் பார்த்துகொள்ளும். தேவையான அளவு தண்ணீர் எடுத்துகொண்டால், சிறுநீரக செயல்பட்டிற்கு உதவியாக இருக்கும். சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படுவதை தடுத்து நிறுத்தும்.
இந்நிலையில் நாம் அடிக்கடி பாரசிட்டமோல் அல்லது க்ரோசினை எடுத்து கொள்வதால் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம். ஸ்டெராய்ட்ஸ் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் எடுத்து கொள்வதால் நமது சிறுநீரகம் பாதிக்கப்படலாம்.
குறிப்பாக நாம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டால், நாம் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துகொள்ள வேண்டும். இதுவே நமது சிறுநீரகம் மோசமடையாமல் பார்த்துகொள்ளும். மேலும் ரத்த அழுத்தத்தை நாம் சீராக வைத்துகொள்ள வேண்டும்.
மேலும் அதிக ரத்த அழுத்தத்தால் நமது சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை நாம் சரியான இடைவேளைகளில் சோதனை செய்து பார்த்துகொள்ள வேண்டும்.
Read in english
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“