குப்பையில் போடும் முட்டை ஓடு போதும்… இப்படி செய்தால் பல வருட தோசைக் கல் பளிச்சென மாறும்!
குப்பையில் சேரும் முட்டை ஓடுகளைக் கொண்டு உங்கள் பழைய தோசைக்கல் மற்றும் அடிபிடித்த பாத்திரங்களை எப்படிப் புதியது போல் பளபளப்பாக மாற்றலாம் என்பதை அறிந்துகொள்ளுங்கள்
குப்பையில் சேரும் முட்டை ஓடுகளைக் கொண்டு உங்கள் பழைய தோசைக்கல் மற்றும் அடிபிடித்த பாத்திரங்களை எப்படிப் புதியது போல் பளபளப்பாக மாற்றலாம் என்பதை அறிந்துகொள்ளுங்கள்
பழைய தோசைக்கல்லில் படிந்திருக்கும் பல வருடக் கறைகளை நீக்குவது கடினம் என நினைக்கிறீர்களா? கவலையே வேண்டாம்! இதோ ஒரு அற்புதமான வழிமுறை.
Advertisment
ஒரு டேபிள்ஸ்பூன் முட்டை ஓடுத் தூள், சிறிது பேக்கிங் சோடா, மற்றும் சிறிது டிஷ்வாஷ் லிக்விட் ஆகியவற்றை ஒரு கலவையாகத் தயார் செய்யவும். இந்தக் கலவையைக் கொண்டு தோசைக்கல்லைக் கழுவினால், எவ்வளவு பழைய கறையாக இருந்தாலும் எளிதாக நீங்கிவிடும். அடிபிடித்த பாத்திரங்கள் அல்லது அடுப்பில் வைக்கும் பாத்திரங்கள் அனைத்தையும் இந்தக் கலவையைப் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.
சுத்தம் செய்யும் முறை:
Advertisment
Advertisements
தயார் செய்த கலவையை தோசைக்கல்லின் மேல் தடவவும்.
அதன் மேல் டிஷ்யூ பேப்பர் அல்லது மெல்லிய காட்டன் துணியைப் பரப்பவும்.
இப்போது, சிறிது வினிகருடன் தண்ணீர் சேர்த்து, துணி மீது தெளிக்கவும். துணி ஈரமாக இருக்க வேண்டும்.
கறைகள் நன்றாக ஊறுவதற்கு, தோசைக்கல்லைக் குறைந்தது 45 நிமிடங்கள் அப்படியே விடவும்.
45 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு ஸ்டீல் ஸ்க்ரப்பர் கொண்டு தேய்க்கவும். கறைகள் எளிதில் நீங்குவதைக் காணலாம்.
மீண்டும் சிறிது கலவையுடன் தண்ணீர் சேர்த்து, தொட்டுத் தேய்க்கவும். இந்த முறையைப் பயன்படுத்தினால், கை வலிக்க தேய்க்காமல், உங்கள் தோசைக்கல் புதிது போலப் பளபளக்கும். இதை உங்கள் வீட்டிலும் முயற்சி செய்து பாருங்கள்!