பக்ரித் என்பது தியாகத்தின் நாள் என்றுதான் அழைக்கப்படுகிறது. இப்ராஹிம் என்ற அல்லாவின் பக்தர், தனது மகனை இறைவனுக்கு பலி கொடுக்க தயாரானார். இதை நாம் பக்ரீத் பண்டிகையாக கொண்டாடுகிறோம்.
இந்நிலையில் இந்த வருடம் நாளை மற்றும் நாளை மறு நாள் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்நாளில் இஸ்லாமியக் குடும்பங்கள் அல்லாவிற்கு, விலங்கை பலி கொடுப்பார்கள். அதை வைத்து குடும்ப உறுப்பினர்களுக்கு, நண்பர்கள் மற்றும் ஏழைகளுக்கு விருந்து கொடுக்கப்படும். இத் அல் அத்ஹா என்றால், யாரும் பசியில் வாடக்கூடாது, என்பதால், இந்த மாமிசம் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
வரலாறு
இப்ராஹிம் என்பவர் அல்லாவின் பக்தர். அவருக்கு அடிக்கடி தனது மகன் இஸ்மையிலை அல்லாவிற்கு பலி கொடுப்பது போல கனவு வருகிறது. இந்நிலையில் அல்லாவிடம் இருந்த இறை நம்பிக்கையால்,இப்ரஹிம் தனது மகனை பலி கொடுக்க ஒப்புக்கொள்வார். இஸ்மையிலும், இதை ஏற்றுக்கொள்வார். இந்நிலையில் பலி கொடுக்கும் நாளில், ஜிப்ரீல் என்ற தேவதையை அனுப்பி வைத்து, இஸ்மயிலுக்கு பதிலாக ஆட்டு குட்டியாக பலி கொடுக்கும்படி மாற்றுவார். இருவர் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை பார்த்து அல்லா இப்படி செய்ததாக கூறப்படுகிறது.
இதன் தேவை
அல்லாவின் மீது நம்புகையுடன் இருப்பதற்கும், மற்ற உயிரிகள் பசியால் கஷ்டப்படக்கூடாது என்பதற்கும் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. தங்களிடம் இருப்பதை, தம்மை சுற்றி இருப்பவர்களுக்கு பகிர்ந்து அளிப்பதே இந்த நாளின் முக்கியத்துவம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil