Eid-E-Milad-Un-Nabi 2019: நண்பர்களுக்கு மிலாடி நபி வாழ்த்துகள் அனுப்புவோமே!!

Eid-E-Milad-Un-Nabi 2019 Wishes Images, Status, Quotes, SMS, Messages: மிலாடி நபி வாழ்த்துகள்

Eid-E-Milad-Un-Nabi 2019 Wishes Images, Status, Quotes, SMS, Messages: மிலாடி நபி வாழ்த்துகள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Eid-E-Milad-Un-Nabi 2019 Eid Miladun Nabi Wishes Images Whatsapp status Messages Quotes Photos - மிலாடி நபி வாழ்த்துகள்

Eid-E-Milad-Un-Nabi 2019 Eid Miladun Nabi Wishes Images Whatsapp status Messages Quotes Photos - மிலாடி நபி வாழ்த்துகள்

Eid-E-Milad-Un-Nabi 2019 Wishes Images, Status, Quotes, Messages, Photos: மனிதர்கள் மிருக குணத்துடன் வாழ்ந்த காலத்தில், அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக இறைவனால் அனுப்பப்படும் துாதுவர்களாக நபிமார்கள் விளங்கினர். இவர்களில் இருபத்து மூன்றாவதாக பூமிக்கு வந்த ஹஜ்ரத் ஈஸா கி.பி. 33ம் ஆண்டு ஏப். 3ல் விண்ணகத்திற்கு உயர்த்தப்பட்டார்கள்.

Advertisment

publive-image

அதன் பிறகு 500 ஆண்டுகளாக எந்த நபியும் பூமிக்கு வரவில்லை. இதன் காரணமாக மக்கள் மிருகங்களாக மாறினர். அவர்களது வாழ்க்கை முறை தரம் தாழ்ந்து போனது.

Advertisment
Advertisements

குறிப்பாக அரபு நாட்டினரின் வாழ்வில் குடிப்பழக்கம், பெண் சிசுக்கொலை, சமூக விரோத செயல்கள் ஆக்கிரமித்தன. இத்தகைய பாவகரமான மக்களை சீர்திருத்த அல்லாஹ்வால் பூமிக்கு அனுப்பப்பட்ட மாமணியே நபிகள் நாயகம்.

publive-image

நாயகம் கி.பி. 570 ரபியுல் அவ்வல் மாதம் 12ம் தேதி மெக்கா நகரில் அவதரித்தார். இவரது தந்தை ஹஜ்ரத் அப்துல்லாஹ். தாய் ஹஜ்ரத் அமீனா. நாயகத்தின் முழுப்பெயர் 'ஹஜ்ரத் முஹம்மத் முஸ்தபா அஹ்மத் முஸ்தபா ரஸூலே கரீம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்'.

publive-image

நாயகம் பிறக்கும் முன்னதாக தந்தையை இழந்தார். தாயார் அவரது ஆறாம் வயதில் காலமானார். இதனால் பாட்டனார் ஹஜ்ரத் அப்துல் முத்தலிப்பின் பாதுகாப்பில் வளர்ந்தார். பிறகு அவரும் காலமாகவே, சிறிய தந்தை ஹஜ்ரத் அபுதாலிப் பராமரிப்பில் வளர்ந்தார். இளமையில் செல்வாக்குடனும், நற்குணத்துடனும் திகழ்ந்தார்.

publive-image

53 வயது வரை மக்களின் கொடுமையை அனுபவித்தார். இதன் காரணமாக மெக்காவில் இருந்து 450 கி.மீ., துாரத்திலுள்ள மதீனாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு அவரை ஆதரிப்போரின் எண்ணிக்கை பெருகியது. இதன் பின் போர் புரிந்து மெக்கா நகர மக்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளச் செய்தார். நாயகம் மிகுந்த பணிவுடையவர். பிறரது துன்பத்தை நீக்குவதில் அக்கறையுள்ளவர். 63 வயது வரை வாழ்ந்த இவர் கி.பி. 632 ரபியுல் அவ்வல் மாதம் 12ல் இவ்வுலகை துறந்தார். இவர் பிறந்ததும், இறந்ததும் ஒரே நாளில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாளையே 'மிலாடி நபி' என்ற பெயரில் கொண்டாடுகிறோம்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: