துரத்தி வந்து எவ்ளோ ரேட்-னு கேட்டாங்க: எதிர் நீச்சல் காயத்ரி பகீர்

நிறைய பேர் நம்மகிட்டயே வந்து ரேட் பேசுவாங்க. ஹலோ, நான் லயோலா காலேஜ் ஸ்டூடண்ட் சொல்லுவேன். அவுங்க இருந்துட்டுப் போ, எவ்வளோ ரேட்ன்னு சொல்லு. நான் வரேன் அப்படின்னுவாங்க.

நிறைய பேர் நம்மகிட்டயே வந்து ரேட் பேசுவாங்க. ஹலோ, நான் லயோலா காலேஜ் ஸ்டூடண்ட் சொல்லுவேன். அவுங்க இருந்துட்டுப் போ, எவ்வளோ ரேட்ன்னு சொல்லு. நான் வரேன் அப்படின்னுவாங்க.

author-image
WebDesk
New Update
Ethirneechal Gayathri

Ethirneechal Gayathri

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில், குறிப்பாக 'எதிர்நீச்சல்' சீரியல் பார்வையாளர்களுக்கு, 'ஜான்சி ராணி' என்றாலே காயத்ரி கிருஷ்ணன் தான் நினைவுக்கு வருவார். அந்தளவுக்கு அந்த கதாபாத்திரத்தில் தனது தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்தவர். சீரியலில் அவர் பேசும் வசனங்களும், அவரது பாடி லாங்குவேஜும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. 

Advertisment

காயத்ரி கிருஷ்ணன், சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது மீடியா பயணத்தைத் தொடங்கினார். பின்னர், ஒரு சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். ஆனால், அவருடைய உண்மையான திறமை வெளிப்பட்டது சின்னத்திரையில்தான். 

சினிமா மற்றும் சின்னத்திரை உலகில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து காயத்ரி வெளிப்படையாகப் பேசியுள்ளார். தான் கல்லூரிப் படிக்கும் போது நேர்ந்த ஒரு மோசமான அனுபவத்தைப் பற்றியும் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

Advertisment
Advertisements

”நிறைய பேர் நம்மகிட்டயே வந்து ரேட் பேசுவாங்க. ஹலோ, நான் லயோலா காலேஜ் ஸ்டூடண்ட் சொல்லுவேன். அவுங்க இருந்துட்டுப் போ, எவ்வளோ ரேட்ன்னு சொல்லு. நான் வரேன் அப்படின்னுவாங்க. அது மறக்க முடியாத அனுபவம்னா டேட்டா கலெக்ஷன் போனோம். ஒரு லார்ஜ்ல தங்கி இருக்கோம்.

சுத்தி இருக்கிற ரூம் எல்லாமே திருநங்கைக்காக ஒதுக்கப்பட்டிருந்துச்சு. அப்போ ஒரு குடிமகன் நல்ல போதையிலே ஃபாலோ பண்ணிட்டே வர்றார். நான் லயோலா காலேஜ் என்று ஐடி கார்டு காமிக்கிறேன். அதெல்லாம் அவருக்கு புரியல. நீ எவ்ளோ ரேட் சொல்லுனு சொல்லிக்கிட்டே இருக்காரு. 



படத்துல எல்லாம் காட்டுற மாதிரி அந்த ஃப்ளோர்ல காரிடார்ல லாஸ்ட் எட்ஜ் வரைக்கும் போய்ட்டோம்.. எல்லாரும் அங்க ஃபங்ஷனுக்கு போய்ட்டாங்க. நான் மட்டும் கீழே இருக்கேன். நான் ப்ரோக்ராம் போறதுக்கு ரெடி ஆயிட்டு இருந்தேன். 

அது ஒரு குறுகிய சந்து. ஜன்னல் இருக்கு. சரி அவர் ரொம்ப படுத்தினா கீழே குதிச்சிடலாம். இவன்கிட்ட என்ன சொன்னாலும் புரியாது. குடிச்சிட்டு இருக்கிறவங்ககிட்ட நம்ம என்ன சொல்ல முடியும். அப்புறம் ரொம்ப ஒரு கட்டத்துல தாங்க முடியாம நான் கத்துறேன். அப்புறம் ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட் ஒருத்தங்க வந்து ஹெல்ப் பண்ணாங்க. சரி சரி ஒண்ணும் இல்லை. நீங்க கிளம்புங்கன்னு சொல்லிட்டு அந்த ஆள அங்கிருந்து அனுப்பி வைச்சாங்க”, என்று அந்த மோசமான சம்பவத்தை பற்றி காயத்ரி மிஸ் வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசினார். 

காயத்ரி கிருஷ்ணன், வெறும் ஒரு நடிகை மட்டுமல்ல, தன் வாழ்வில் கண்ட சவால்களைத் துணிவுடன் எதிர்கொண்டு வெற்றிபெற்ற ஒரு தன்னம்பிக்கைப் பெண். அவரின் பயணம், பல பெண்களுக்கு ஒரு சிறந்த உந்துதலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: