பூக்காத ரோஜா செடியும் பூக்கும்… டீ தூள் வைத்து வீட்டிலேயே உரம் தயாரித்து இப்படி யூஸ் பண்ணுங்க!
கொத்துக் கொத்தாக ரோஜா பூத்துக் குலுங்க வைக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதற்கான டிப்ஸ் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். இதனை பின்பற்றுவதும் மிக எளிதாக இருக்கும்.
கொத்துக் கொத்தாக ரோஜா பூத்துக் குலுங்க வைக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதற்கான டிப்ஸ் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். இதனை பின்பற்றுவதும் மிக எளிதாக இருக்கும்.
பூக்காத ரோஜா செடியும் பூக்கும்… டீ தூள் வைத்து வீட்டிலேயே உரம் தயாரித்து இப்படி யூஸ் பண்ணுங்க!
பொதுவாக பெண்களுக்கு பூக்கள் என்றாலே பிடிக்கும். அதிலும் குறிப்பாக இந்த ரோஜா பூ என்றால் பிடிக்காத ஆளே இருக்க மாட்டார்கள். அதனால் இன்றைய சூழலில் அனைவருமே தங்களது வீடுகளில் உள்ள தோட்டம் அல்லது மாடி தோட்டங்களில் நமது மனதிற்கு மிகவும் பிடித்த இந்த ரோஜா செடியை அனைவருமே தங்களது வீடுகளில் வளர்க்கிறார்கள். அப்படி ரோஜா செடியை விரும்பி வளர்ப்பவர்கள் அனைவருமே கூறுவது நான் எனது ரோஜா செடியை நன்றாகதான் பராமரிகின்றேன். ஆனால், எனது செடிகளில் ரோஜா பூக்கவில்லை என்பதுதான். அப்படி கவலைப்படுபவர்களுக்காகதான் இன்றைய பதிவில் ரோஜா செடியில் பூக்கள் பூக்க உதவும் குறிப்பினை பற்றி பார்க்கலாம்.
Advertisment
ரோஜா பூ அதிகமாக பூப்பதற்கு இயற்கையான முறையிலேயே உரம் தயாரிக்க முடியும். இதற்கான கரைசலை வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டு தயாரிக்கலாம். இதனால் பெரிய அளவில் செலவும் ஏற்படாது. இதனால், ரோஜா மொட்டுகள் விட்டு நிறைய பூக்கள் பூத்து இலைகள் பச்சை நிறத்தில் ஆரோக்கியமாக வளரும். இந்த உரத்தை பயன்படுத்துவதற்கு முன்பு ரோஜா தொட்டியில் உள்ள களைச் செடிகள், பூச்சி தாக்கிய ரோஜா இலைகளை முழுவதுமாக அகற்ற வேண்டும்.
செய்முறை:
உப்பு சேர்க்காத வடிச்ச கஞ்சியின் சாதத்தை பயன்படுத்த வேண்டும். சாதத்தில் இருந்து வடித்த கஞ்சியை ஆறவிட்டு, அதில் ஒரு டீஸ்பூன் டீத்தூள் சேர்த்து, ஒரு நாள் முழுவதும் அப்படியே வைக்க வேண்டும். மறுநாள் காலையில், இந்த உரத்தை எடுத்து, அதனுடன் 5 மடங்கு தண்ணீர் சேர்த்து வடிகட்டி, செடிகளுக்கு ஊற்ற வேண்டும். முன்னதாக, ஒரு செடிக்கு ஒரு ஸ்பூன் வாழைப் பழ தூள் போட வேண்டும். இதனை சேர்க்கும் செடிகள் நன்றாக செழிப்பாக மொட்டுகள் விட்டு வளரும்.