சில நேரங்களில், சில உணவுகளை ஜீரணிப்பது கடினம். ருசியான உணவுக்குப் பிறகு, நாம் வாய்வு மற்றும் வீக்கத்தால் அவதிப்படுகிறோம். ஆனால் அதிகமாக சாப்பிடுவதற்கு, தூண்டுதல் எப்போதும் காரணம் அல்ல என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
ஊட்டச்சத்து நிபுணரான ஷிவானி காண்ட்வால் கருத்துப்படி, கவனச்சிதறல் முதல் நீரிழப்பு வரை, ஒருவரை அதிகமாகச் சாப்பிடத் தூண்டும் பல காரணங்கள் இருக்கலாம்.
சாப்பிடும் போது கவனச்சிதறல்
சாப்பிடும் போது டிவி பார்ப்பது அல்லது மொபைல் ஃபோனைப் பயன்படுத்துவதால் நாம் அதிகமாக சாப்பிடுகிறோம், நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் போதுமான கவனம் செலுத்தாமல் வேகமாக சாப்பிடுகிறோம்," என்று அவர் indianexpress.com இடம் கூறினார்.
மன அழுத்தம்
நிபுணர்களின் கூற்றுப்படி, அதிகப்படியான உணவுக்கு, மன அழுத்தம் முக்கிய காரணங்களில் ஒன்றாகும். "அழுத்தத்தின் போது, உடல் ஒரு ஹார்மோனை வெளியிடுகிறது, இது ஆற்றல் இழப்பை நிர்வகிக்க பசியை ஊக்குவிக்கிறது," என்று அவர் விளக்கினார்.
வேகமாக சாப்பிடுவது
மிக வேகமாக சாப்பிடுபவர்கள் அதிகமாக சாப்பிடுகிறார்கள், ஏனெனில் அவர்களின் வயிறு நிரம்பியிருப்பதை உணர்ந்து சாப்பிடுவதை நிறுத்துவதற்கு குறிப்பை அனுப்ப அவர்களின் மூளை நேரம் எடுக்கும்.
நீரிழப்பு
ஒரு ஆய்வின்படி, நீங்கள் உண்மையில் தாகமாக இருக்கும் போது நீங்கள் பசியை உணரலாம், அதாவது, நீங்கள் பசி எடுக்கும் போதெல்லாம் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும், இன்னும் பசியாக இருந்தால், நீங்கள் ஒரு சிறிய உணவை சாப்பிடலாம்," என்று அவர் பரிந்துரைத்தார்.
உணவுக்குப்பின் ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகம் விதைகளை சாப்பிடுவதன் மூலம் வீக்கத்திலிருந்து நிவாரணம் பெறலாம் அல்லது இஞ்சி மற்றும் எலுமிச்சையுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைப் பருகலாம் என உணவியல் நிபுணர் மேலும் பரிந்துரைத்தார்.
மேலும், நீங்கள் உணவுக்கு முன் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை எடுத்துக் கொள்ளலாம் அல்லது உணவுக்குப் பிறகு மூலிகை தேநீர் எடுத்துக் கொள்ளலாம், ”என்று அவர் அறிவுறுத்தினார்.
மேலே உள்ள உதவிக்குறிப்புகளைத் தவிர, வாயுவை போக்க சில பயனுள்ள வழிகளையும் நீங்கள் முயற்சி செய்யலாம், அன்ஷு துவா என்ற ஊட்டச்சத்து நிபுணர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள உதவிக் குறிப்புகள் இதோ!
காலை உணவைத் தவிர்க்க வேண்டாம்: கனமான இரவு உணவிற்குப் பிறகு காலை உணவைத் தவிர்ப்பது நல்ல யோசனையாகத் தோன்றலாம். இருப்பினும், இலகுவான மற்றும் நார்ச்சத்து நிறைந்த காலை உணவு, உங்கள் உடலை அதன் வழக்கமான செயல்பாடுகள் செய்வதற்கு உதவும் என்று நிபுணர் கூறினார்.
சுறுசுறுப்பாக இருங்கள்: 15 நிமிட விறுவிறுப்பான நடை, உங்கள் வயிற்றில் இருந்து அழுத்தத்தை அகற்றவும், உங்கள் செரிமான அமைப்பைத் தூண்டவும் உதவும்.
பொட்டாசியம் நிறைந்த உணவை உண்ணுங்கள்: பொட்டாசியம் உடலில் அதிகப்படியான திரவங்களை அகற்ற உதவுகிறது. வாழைப்பழம், தேங்காய் தண்ணீர், வெள்ளரி, தர்பூசணி, கீரை மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு போன்ற உணவுகள் சிறந்த விருப்பங்கள்.
ஹைட்ரேட் செய்யுங்கள்: “அதிகமாக சாப்பிட்ட பிறகு வீக்கம் ஏற்படுவது, பொதுவாக நீங்கள் சாப்பிட்ட சோடியம் நிறைந்த உணவுகள் காரணமாக உங்கள் உடல் வைத்திருக்கும் அனைத்து திரவங்களிலிருந்தும் வருகிறது.
போதுமான அளவு தண்ணீரைக் குடிப்பது, அந்த சோடியத்தில் சிலவற்றை வெளியேற்றவும், அதிகப்படியான திரவங்களை உங்கள் உடல் வெளியிடவும் உதவும், இது குறைந்த வீக்கத்தை உணர வைக்கும். எனவே, நாள் முழுவதும் தண்ணீரைப் பருகவும், ”என்று அவர் பரிந்துரைத்தார்.
சூடான தேநீர் பருகுங்கள்:
எவ்வாறாயினும், அனைத்து வீக்கமும் திரவத்தைத் தக்கவைப்பதன் காரணமாக இல்லை என்று அவர் கூறினார். “அதிகமாக சாப்பிடுவது, அல்லது குடலில் எரிச்சலை ஏற்படுத்தும் உணவுகளை சாப்பிடுவது செரிமான மண்டலத்தில் வாயுவை உண்டாக்குகிறது.
சூடான தேநீரைப் பருகுவது உங்கள் குடலைத் தணிக்கவும், உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடிய வாயுக்களில் இருந்து விடுபடவும் உதவும். நீங்கள் ஏதாவது லேசானதாக விரும்பினால், புதினா டீ அல்லது டேன்டேலியன் டீ பருகலாம்.
தேநீரில் சர்க்கரையைத் தவிர்ப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள், ஏனென்றால் சர்க்கரையும் உங்கள் உயிரணுக்களில் தண்ணீரைத் தக்கவைக்க வழிவகுக்கிறது, ”என்று அவர் எழுதினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“