சத்குரு ஜக்கி வாசுதேவ், நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய் வைத்து வீட்டிலே செய்ய முடியும் விஷயத்தை சொல்கிறார்.
இதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்ளலாம். நெல்லிக்காய், தேன், இடித்த மிளகு. நாம் நெல்லிக்காய்யை வெட்டி, அதை தேனில் சேர்க்கவும். தொடர்ந்து இதில் இடித்த மிளகை சேர்த்து இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு, அடித்த நாள் 3 வேளை இதை சாப்பிட வேண்டும்
இது வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மிகவும் நல்லது. 4 முதல் 6 வாரங்கங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி உடலை நோய்களில் இருந்து குணமாக்கும்.
மிளகில், ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. உடலில் உள்ள நச்சுதன்மைகளை நீக்க உதவுகிறது. சில புற்றுநோய்களை தடுக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் வீக்கத்திற்கு எதிராக இருக்கும் பண்புகள் காயங்களை குணமாக்க உதவுகிறது. மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது.
தேனில் இருக்கும் , சுவாசப் பிரச்சனைகளை தடுத்து நிறுத்துகிறது. குறிப்பாக இதில் உள்ள வீக்கத்திற்கு எதிரான பண்புகள், ஆண்டி ஆக்ஸிடண்ட், நுண்ணுயிரிகளை எதிர்க்கும் பண்புகள் இதை செய்ய உதவுகிறது.
இது சருமம், கூந்தலுக்கு நல்லது ரத்த அணுக்களை அதிகரிக்கும். கொலஸ்டராலை குறைக்க, இதய செயல்பாடுகளை அதிகரிக்க, வெறும் வயிற்றில் எடுத்துகொள்ளவும். இதுபோல இரவு சாப்பிட்டபின்பு 30 நிமிடங்களுக்கு பின்பாக இதை எடுத்துகொள்ளவும்.
Read in english
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“